Tuesday 18 April 2023

Christian Song Title PNG Files

 Ebenesarae John Jebaraj PNG


Saturday 25 March 2023

தாவீதும், கூழாங்கற்களும்

 தாவீதும், கூழாங்கற்களும்

The History of the Stone from David's Sling - a poem by Jonathan Moya - All  Poetry

          தாவீதின் முதல் யுத்தத்தில் தாவீது பயன்படுத்திய ஆயுதங்கள் தான் இந்த கூழாங்கற்கள். இதனை 1சாமு. 17ம் அதிகாரத்தில் காணலாம். அதாவது, கோலியாத்துடனான அந்த யுத்தத்தில் தான் தாவீது இந்த கூழாங்கற்களை பயன்படுத்தினார். 


கூழாங்கற்கள்:

         இவை கையால் பெயர்க்கப்படாத கற்கள். ஆம்! கூழாங்கற்கள் தானே உருவாகி மலையிலிருந்து உண்டாகி வருவதாகும். இது பாறை வகையைச் சார்ந்தது. பல வண்ணங்களிலும், எடைகளிலும் இருக்கும். வேதாகமத்தில் தாவீது கோலியாத் சம்பவத்தில் இந்த கூழாங்கற்கள் முக்கிய இடம் பெற்றிருக்கின்றன. 


ஆற்றங்கரையில் இந்த கூழாங்கற்கள்:

           ஏலா பள்ளத்தாக்கின் அருகில் ஒரு ஆற்றின் கரையில் இந்த கூழாங்கற்கள் மற்ற தங்கள் சக கற்களோடு கிடந்தன. அவைகளுக்கு மேன்மையுமில்லை; தங்களுக்கென்று தரிசனமும் இல்லை. ஆற்றைக் கடப்பவர்கள் அல்லது ஆற்றிக்கு வருபவர்கள் கால்களில் அவைகள் மிதிப்பட்டும், பொருட்படுத்த படாமலும் கிடந்தன. 


            ஒரு நாள் அவைகளில் 5 கற்களை ஒரு கை வந்து எடுத்தது. ஆம்! நம்மை தேடி நமக்கான தரிசனத்தில் நம்மை பயன்படுத்த நம் எஜமான் நம்மை தன் கையில் எடுத்தார். அந்த கூழாங்கற்களும் தங்களை எடுத்தவரின் சித்ததிற்கு சம்மதித்து தங்கள் பயணத்தை தொடர்ந்தது. 


யுத்தத்தில் கூழாங்கற்கள்:

            தாவீது ஒரு கவணுடன் இந்த 5 கூழாங்கற்களை எடுத்துச் சென்றார். அதன் மூலம் அவன் கோலியாத்தை எதிர்க்க சென்றார். அவற்றை தன்னுடைய அடைப்பையில் போட்டு கொண்டு சென்றார். ஆகவே அந்த கூழாங்கற்கள் தங்களுக்கான நேரம் வரும் வரை பொறுமையாக காத்திருந்தது.


5 கற்கள்:

            தாவீது 5 கூழாங்கற்களை எடுத்தார். அதாவது, கோலியாத் உட்பட அவன் குடும்பத்தை சேர்ந்த 5 இரட்சதர்களை அழிக்கும் படியாகவே இந்த 5 கற்களும் எடுக்க பட்டது என்று சிலர் தியானிப்பர். 


         இந்த 5 கற்களும் 5 விதமான பிசாசின் தந்திரங்களை ஜெயிக்கும் படியாக இருக்கிறது என்றும், இந்த 5 கற்களும் 5 விதமான கிருபைகள் என்றும் சில தேவ மனிதர்கள் தியானிக்கின்றனர். 


🪨முதல் கல்: சத்துருவின் தந்திரங்களை முறியடிப்பது. (1சாமு. 17:8,9) 


🪨இரண்டாம் கல்: நாம் விடாய்த்திருக்கையில் நம்மை மேற்கொள்ளும் சத்துருவை முறியடிப்பது. ( 2சாமு. 21: 15, 16)


🪨மூன்றாம் கல்: அபிஷேகிக்க பட்டவர்களை அல்லது அபிஷேகத்தை விட்டு நாம் நீங்குகையில் நம்மை மேற்கொள்ளும் சத்துருவை முறியடிப்பது. ( 2சாமு. 21:18)


🪨நான்காம் கல்: பழிவாங்க துடிக்கும் சத்துருவை முறியடிப்பது. ( 2சாமு. 21: 19)


🪨ஐந்தாம் கல்: மிகுந்த பெலனோடு நம்மை நெருக்கும் சத்துருவை முறியடிப்பது. ( 2 சாமு. 20: 20)


             பொதுவாக யுத்தத்தில் வாள், கத்தி, ஈட்டி, வில், அம்பு போன்ற பலமான ஆயுதங்களே பயன்படுத்த படும். வாள் பிடித்து சண்டைக்கு செல்வதிலும் ஒரு மேன்மை இருக்கதான் செய்கிறது. ஆகவே, இந்த பலமான ஆயுதங்களுக்கு கிடைத்த இடம் நமக்கும் கிடைத்து விட்டது என்று தலைகணத்தில் இந்த கூழாங்கற்கள் இருக்கவில்லை.     மாறாக, தங்களுக்கான ஏற்ற நேரம் வரும் வரை பொறுமையாக தாங்கள் அடைக்க பட்டிருந்த அடைப்பைக்குள்  காத்திருந்தன. 


          1 பேதுரு 5:6 ல் வேதமும் சொல்கிறது, "ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்" என்று. 


          ஆம்! கர்த்தருடைய சரியான திட்டங்களுக்காய், அந்த திட்டங்களின் சரியான தருணங்களுக்காய் நாம் பொறுமையுடன் காத்திருத்தல் அவசியமானது. அப்போது தான் அது நமக்கு ஜெயமாய் மாறுகிறது. 


        கற்களை எடுத்துக் கொண்ட தாவீது தேவனுடைய தைரியத்தினால் கோலியாத்தை தாக்க முன்னேறி சென்றான். கர்த்தர் பட்டயத்தினால் மாத்திரம் நம்மை இரட்ச்சிக்கிறவர் அல்ல; அவர் நம்மை வெற்றிசிறக்க பண்ண சித்தம் கொண்டால் ஒரு புல்லை கொண்டும் கிரியைகளை நடப்பிக்க அவரால் கூடும். 


          1 கொரி. 1:27 ல் வேதம் சொல்கிறது, "பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்" என்று. ஆம்! அற்பமான, எதிர்பாராத காரியங்களை வைத்தும் நம்மை இரட்சிக்க கர்த்தர் வல்லவர் என்பதை தாவீதும் நன்றாய் அறிந்தார். ஆகவேதான், நான் பட்டயம் இல்லாமல் கர்த்தரின் நாமத்தினால் வருகிறேன் என்று விசுவாச அறிக்கையிடுகிறார். விசுவாச அறிக்கையிட்ட தாவீது ஒரு கூழாங்கல்லை எடுத்து கவணில் வைத்து சுழற்றி கோலியாத்தின் நெற்றியில் குறி பார்த்து அடித்தார். 


             அதுவரை தாழ்மையோடு பொறுமையோடு காத்திருந்த கற்கள் தங்களுக்கான வேளை வருகையில் தான் சிறப்பாக செயல்படும் படி தன்னை தன்னுடைய எஜமானின் கையில் ஒப்புக்கொடுத்து விட்டன. அது தன்னை கவணோடு  பொருந்தி செயல்பட ஒப்புக்கொடுத்தது.


           "நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள்".

( ஏசாயா 1 : 19 ) என்று வேதமும் நமக்கு கற்று தருகிறது. ஆம்! நாம் மனம் பொருந்தி செவிக் கொடுத்தால் தான் நன்மையை, ஜெயத்தை சுதந்தரிக்க முடியும்.


            கவண் இல்லாமல் இந்த கல் ஜெயம் பெற்றிருக்க முடியாது. கல் இல்லாமல் வெறுமனே கவணும் கிரியை செய்திருக்க முடியாது. ஆம்!  தேவபிள்ளைகள் ஒருவருக்கொருவர் இப்படி ஐக்கியப்பட்டிருக்க வேண்டும். அப்போது தான் சாத்தானை, நம் எதிராளியை நாம் வெல்ல முடியும். 


பரிசுத்தவான்களுடைய குறைவில் நாம் உதவி செய்ய வேண்டும். 

( ரோமர் 12 : 13 )


           கவண், தான் தான் பெரியவன் என்றோ; அல்லது கல் தான் தான் பெரியவன் என்றோ பகை பாராட்டிருந்தால் இத்தகைய ஆர்ப்பரிக்குற வெற்றி அவர்களுக்கு கிடைத்திராது. அது இரண்டும் ஒருமனபட்டு செயல்பட்டதினாலே தான் ஜெயம் கிடைத்தது. 


           கவணை விட்டு புறப்பட்ட கல்லோ தன் எஜமானின் இலக்கில் துல்லியமாக பறந்தது. தேவன் நம்மை பலவான் கையிலுள்ள அம்புகளாய் தெரிந்தெடுத்துள்ளார். பலவான் கையினால் எறியப்பட்ட அம்பு காற்றை, எதிர் திசையை, தடைகளை, தன்னை நோக்கி வரும் பிரச்சனைகளை கிழித்து கொண்டு தன் பாதையில், தனக்கு நியமிக்க பட்ட ஓட்டத்தில், தன் எஜமானனுடைய இலக்கில் வேகமாய் முன்னேறி கொண்டே இருக்கும். அதினாலேயே அது இலக்கை அடையும். சத்துருவின் நெஞ்சையும் பிளக்கும். 


          வேதம் செல்கிறது, "உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள் உனக்கு முன்னே செவ்வையாய்ப் பார்க்கக்கடவது" என்று. 

( நீதி. 4 : 25 ) 


           ஆம்! யுத்தத்திற்கு வந்த கல் தனக்கு இஷ்டமான பாதையில் ஓடாமல் எஜமானனுடைய பாதையில் நேராய் நோக்கி பறந்தது. அதினால் முடிவு மகிமையாய், ஆர்ப்பரிப்பாய், ஆரவாரமாய், மேன்மையாய் இருந்தது. ஆம்! அந்த கல் கோலியாத்தின் நெற்றியை சரியாய் குறி பார்த்து தாக்கியது. அந்தோ!! சத்துரு சரிந்தான்; அவன் விழுந்தான்; பகைவர்களின் நம்பிக்கை அதினால் படுகுழியில் விழுந்து விட்டது. தாவீது ஜெயித்தான். கர்த்தருடைய ஜனம் வென்று விட்டது. 


           நாம் நம்மை தேவ சித்ததிற்கு ஒப்புக் கொடுத்து செயல்பட அர்ப்பணித்தால் அற்பமான கூழாங்கல்லான நாம் கர்த்தருடைய கரத்தில் ஜெயித்த கூழாங்கல்லாய் இருப்போம். ஆம்! நாம் விலையேற பெற்றவர்களாய் மாறி விடுவோம். ஆமென்!!🙏🙏

Tuesday 30 August 2022

பெற்றோர் பெற்றோராக இருங்கள்,ஒருபோதும் பெற்றோரே நண்பராகாதீர்...!

பெற்றோர் பெற்றோராக இருங்கள்,
ஒருபோதும் பெற்றோரே நண்பராகாதீர்...!

Infosys நிறுவனரின் எச்சரிக்கை பதிவு...!
திரு. நாராயண மூர்த்தி INFOSYS அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை.

நாம் நமது தற்காலக்  குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கத் தவறி விட்டோமா?  

அவர் தனது அண்டை வீட்டுக்காரர் தன்னுடன் மன வருத்தத்தோடு பகிர்ந்து கொண்ட விஷயத்தை நமக்குப் பதிவு செய்கிறார்.
பணி முடிந்து  வெகு தொலைவு பயணம் செய்து களைப்புடன் திரும்பிய நான் என் மனைவியை கடும் காய்ச்சலுடன் படுக்கையில் படுத்திருக்கக் கண்டேன். எனக்காக அந்த ஜுரத்திலும் சமையல் செய்து உணவை ட்ரேயில் வைத்து மூடி வைத்திருந்தாள். நான் வழக்கமாக உண்ணும் எல்லாவற்றையும் சமைத்து வைத்திருந்தாள். அவளுக்கு தான் என் மேல் எவ்வளவு கரிசனம். உடல் நலம் சரியில்லாத நேரத்தில் கூட எனக்காக சமைத்து வைத்திருக்கிறாளே. 

சாப்பிட அமர்ந்த பின் தான் ஏதோ குறைவதை உணர்ந்தேன். டிவி பார்த்துக் கொண்டிருந்த என் வளர்ந்த மகளிடம் செல்லம் என் மாத்திரையையும் தண்ணீரும் எடுத்துக் கொண்டு வா என்று கூறினேன். அவளை நான் தொந்தரவு செய்ததை விரும்பாமல் கண்ணை உருட்டி அவள் அதிருப்தியைத் தெரிவித்து விட்டு நான் கேட்டதைக் கொண்டு வந்து கொடுத்தாள். ஒரு நிமிடம் கழித்து சாம்பாரில் உப்பு குறைவாக இருந்ததால் அவளை எடுத்துக் கொண்டு வரப் பணித்தேன்.  அவள் சை என்று கூறிக் கொண்டே காலை அழுத்தமாக வைத்து நடந்து போய்க் கொண்டு வந்து கொடுத்தாள். அவ்வாறு அவள் செய்தது நிச்சயம் நான் அவளைத் தொந்தரவு செய்ததை அவள் விரும்பவில்லை என்று எனக்குத் தெரிந்தது.

நான் சில நிமிடம் கழித்து மீண்டும் செல்லம் என்று அழைத்த போது  அவள் கையில் இருந்த டிவி ரிமோட்டை பட்டென்று மேஜையில் வைத்து விட்டு அப்பா உங்களுக்கு இப்போது என்ன வேண்டும்? எத்தனை முறை தான்  என்னை எழுப்புவீர்கள்? நானும் தான் நாள் முழுதும்  வேலை பார்த்து விட்டு வந்திருக்கிறேன். எனக்கும் களைப்பாக தான் இருக்கிறது என்று கூறினாள். நான் ஸாரிமா என்று சொல்லி விட்டு சாப்பிட்ட பாத்திரங்களை எடுத்து சமையலறை சிங்கில் போட்டுவிட்டு என் கண்களில் இருந்து உருண்டோடிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன்.

என் இதயம் அழுதது.  நான் அவ்வப்போது எனக்குள் கேட்டுக் கொள்ளும் கேள்வி இது தான். இந்தக் கால இளைய தலைமுறையினர் ஏன் இது போல் நடந்து கொள்கிறார்கள்? நாம் அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக சுதந்திரம்   கொடுத்தது  தவறோ?  அவர்களுக்கு நல்லொழுக்கத்தையும் பண்பாட்டையும் கற்றுக் கொடுக்கத் தவறி விட்டோமோ? நாம் அவர்களை நண்பர்கள் போல் நடத்தியது தவறோ? அவர்களுக்கு வாழ்க்கையில் ஆயிரம் நண்பர்கள் கிடைப்பார்கள். ஆனால் பெற்றோர்கள் நாம் மட்டும் தானே. பெற்றோருக்கான கடமையை நாம் செய்யாவிட்டால் வேறு யார் செய்யப் போகிறார்கள்?

இன்று பிறந்த குழந்தைக்குக் கூட சுயமரியாதை இருப்பதைப் பற்றிக் கவலைப் படுகிறது இந்த உலகம். ஆனால்  பெற்றோர்களுக்கு மட்டும் சுயமரியாதை இல்லையா? அவர்கள் தங்கள் குழந்தைகளின் ஈகோக்களை வளர்த்து விட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா? இன்றைய பெரும்பாலான பெற்றோர்கள் கூறுவது இதைத்தான். இந்தக் காலத்தில் எந்தக் குழந்தைகள் பெற்றோருக்குக்  கீழ்படிகிறார்கள்? இதற்குக் காரணம் என்ன?

இதேபோல் தான் அன்று ஒரு பார்ட்டியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது என் 50 வயது நண்பர் தன் கார் சாவியை மறந்து போய்க் காரிலேயே விட்டு விட்டு வந்து விட்டதால் தன் டீன் ஏஜ் பெண்ணை எடுத்துக் கொண்டு வரப் பணித்தார். அவள் நான் என்ன உனக்கு வேலைக்காரியா? நீயே போய் எடுத்துக் கொள் என்றாள். அவரும் சிரித்துக் கொண்டே இல்லை மா நான் தான் உனக்கு வாழ் நாள் முழுவதும் சேவகன் என்று கூறிக் கொண்டே போய் கார் சாவியை எடுத்துக் கொண்டு வந்தார்.   இதுவே இன்று சமுதாயத்தில் நடக்கிறது.  இதற்குக் காரணம் என்ன?

நாம் நமது குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையைப் பற்றியும் சுயமரியாதையைப் பற்றியும் கற்றுக் கொடுக்க விரும்பினால் முதலில் இதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.  அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு பணக்காரர்களாகவும் புகழ் பெற்றவர்களாகவும் இருந்தாலும் அவர்களுடைய பெற்றோர்கள் என்றும் பெற்றோர்கள் தான். அவர்கள் என்றுமே அவர்கள் பெற்றோருக்கு சமமாக மாட்டார்கள்.

பெற்றோருக்கு நான் சொல்ல விரும்புவது இது தான். நீங்கள் உங்கள் குழந்தைகளை நண்பர்களாக நடத்தாதீர்கள்.  அவர்களுக்கு வாழ்க்கையில் ஆயிரம் நண்பர்கள் கிடைக்கலாம். ஆனால் பெற்றோர்கள் நீங்கள் மட்டுமே.

அதனால் அவர்களை நீங்கள்  வளர்ப்பதற்கு விதிமுறைகளை வகுப்பதற்கும், அந்த  விதிமுறைகளை அவர்கள்  மதிப்பதற்கு அவர்களைக் கட்டாயப்  படுத்துவதற்கும் ஒரு போதும் அஞ்சாதீர்கள்.
 

Monday 18 July 2022

80 களில் வாழ்ந்த இனிய வாழ்க்கை

 40 வருடங்களுக்கு முன்

80 களில் வாழ்ந்த இனிய வாழ்க்கை

1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக் கொண்டோம்.

2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி அழைப்பாள்.

3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து உடுத்தி கொண்டோம்.

4. முதல் நாள் கூட்டு பொறியல் ரசம் சாம்பாரை சுண்ட செய்து பழங்கஞ்சியுடன் பருகினோம்.

5. எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன் வீட்டு சொந்தங்களே பாசத்துடன் பரிமாறினார்.

6. ரயில் பயணத்திற்கு புளிசாதமும் எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்.

7. பெரும்பாலும் பேருந்தில் தான் போனோம்.

8. பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக இருந்தனர்.

9. இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்.

10. பாடல்களின் வரிகள் புரிந்தன.

11. காதலிப்பவர்களுக்கும் உறவுகளுக்கும் கடிதங்கள் எழுதினோம்.

12. ரஜினி கமல் 'பொங்கல்' 'தீபாவளி' க்ரீடிங்க்ஸ் கிடைத்தது.

13. உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா பார்த்தோம்.

14. காணும் பொங்கலுக்கு உறவுகளை பார்த்தோம்.

15. திருடனை பிடிக்க ஊரே ஓடியது.

16. பாம்பு அடிக்க பக்கத்து வீட்டு மாமா வந்தார்.

17. பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு பயந்தோம்.

18. கல்யாணத்திற்கு உறவுகள் இரண்டு நாள் முன்னரே வந்தனர்.

19.மானேஜராக பணி புரிந்தாலும் தந்தை சைக்கிளில் தான் பவனி வந்தார்.

20. வெள்ளி அன்று ஒலியும் ஒளியும் பார்க்க ஆவலோடு காத்து கிடந்தோம்.

21. பழைய புத்தகங்களை பாதி விலைக்கு வாங்கி பாடம் படித்தோம்.

22. பனம் பழம் சுட்டு உண்ண காடு காடாய் அடைந்தோம்.

23. கயித்து கட்டிலை பெரியவர்களுக்கு கொடுத்து விட்டு பாயில் படுத்து உறங்கினோம்.

24. எல்லாவற்றையும் விட காலை பொழுதுகள் ரம்மியமாக இருந்தது,

முன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றை தொலைத்தோம்.

"நாகரீகப் போர்வை போர்த்தி  நாசமாய் போனோம்.

அன்றைய வாழ்க்கையில் பிரச்சனைகளும் இருந்தன!

இன்று பிரச்சனைகளே வாழ்க்கையாகிப் போனது

இன்று என்ன தான் உலகம் நவீனமயம் ஆனாலும் தொலைந்த வசந்தகாலத்தை இன்று யாராலும் மீட்க முடியாது.


Monday 21 June 2021

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும்????

மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்யலாம் 


https://youtu.be/yMOrq436rdI

Be happy

Tamil motivational video

Saturday 2 March 2019

முடிவு | J.E.Jebha

முடிவு



அன்று பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது.

காலை முதலே பள்ளியில் மாணவர் கூட்டம் அலைமோதியது. அலுவலக நிர்வாகி சுமார் 10 மணியளவில் பள்ளியை திறக்க, மாணவர்கள் முண்டியடித்து பள்ளியினுள் நுழைய, அவர்களுடன்,  அப்பள்ளியே முதல் மாணவனாக வருவான் என்று எதிர்பார்த்த ராமும் தனது மதிப்பெண்ணை தேடினான்.

வெற்றிப் பெற்றவர்கள் ஆடி பாடி கொண்டாட, தலையில் இடி விழுந்தவன் போல பட்டியலை மேலும் கீழும் பல நூறு முறை தேடினான் ராம்.

தனது எண் பட்டியலில் இல்லை.

அங்கிருந்து வெளியே வந்தவன் கால் போன திசையில் ஓடினான்.

எங்கே செல்வது,

என்ன செய்வதென்று தெரியாத ராம்,

வாழ்க்கையின் முடிவை நோக்கி,

மலையின் உச்சியை நோக்கி ஓடினான்.

பின்னே ஒரு மகிழுந்து வேகமாக ஒலியெழுப்பி அருகில் வந்தது. உள்ளே தலைமையாசிரியர். "அட மடையா, அறிவிப்பு பலகையை மறந்து, உன் கையிலுள்ள கைபேசியில் தேடு உன் எண்ணை;

நீ தான் மாநிலத்தில் முதல் மாணவன் "

என்று கூறவும் கல் தட்டி, 

கால் தடுக்கி,

கட்டிலிலிருந்து கீழே விழுந்தான்,

மாட்டு தொழுவத்தில் உறங்கி கொண்டிருந்த ராம்...

இசை மற்றும் இலக்கியபணியில்
J.E. ஜெபா


Wednesday 27 February 2019

தொல்காப்பியத்தில் தமிழிசை

தொல்காப்பியத்தில் தமிழிசை




தொல்காப்பியத்தில் தமிழிசை பற்றிய குறிப்புகள் உள்ளன. பழந்தமிழ் இலக்கண நூல்களுள் முழுமையாகக் கிடைக்கும் நூல் தொல்காப்பியம். இது தொல்காப்பியர் என்பவரால் எழுதப்பட்டது. எழுத்து, சொல், பொருள் என்ற தமிழ் இலக்கணம் கூறும் நூல் இது. இசைத்தமிழ், தொடர்பான செய்திகளை இந்நூல் ஆங்காங்குக்கூறுகிறது. தமிழிசை பற்றிய நூல்களில், இன்று கிடைக்கப்பெறுகின்ற மிகத் தொன்மையான நூல் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியர் காலம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டளவினது என்பது அறிஞர்கள் கருத்து. இந்நூலின் காலக் கணிப்பு தமிழர் இசையின் தொன்மையை உறுதிப்படுத்தும். இருவகை இசை, இசைக் கருவிகள் பற்றி தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. ஒன்று தொழிலிசை, மற்றையது இன்ப இசை. தொழிலிசைக் கருவி பறை என்றும், இன்ப இசைக் கருவி யாழ் என்றும் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு திணைகளுக்கும் உரிய தொழிலிசை, இன்ப இசை பற்றியும் இது குறிப்பிடுகிறது.

இசை பற்றிய குறிப்புகள்

"அசையும் சீரும் இசையொடு சேர்த்தி
வகுத்தனர் உணர்த்தலும் வல்லோர் ஆறே"
"இசைப்பு இசையாகும் என்கிறது ”
இசைப்பு என்பது யாழ் போன்ற இசைக்கருவிகளை இசைத்தல் ஆகும் என்பது இந்நூற்பாவின் பொருள்.
“ அளபு இறந்து இசைத்தலும் ஒற்று இசை நீடலும்
உள என மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்"
இசையொடு பொருந்திய யாழ் நூலில் இசையிலே எழுத்து ஒலிகள் அளவுகடந்து ஒலித்தலும், ஒற்றுக்கள் நீண்டு ஒலித்தலும் உண்டு என்று அறிஞர் கூறுவர் என்பது இதன் பொருள்.
இசையைத் தொழிலாக கொண்ட மக்கள் உபயோகப்படுத்தும் இசைக்கருவிக்குப் பறை என்றும், இன்பமாக பொழுது போக்கும் மக்கள் பயன்படுத்தும் இசைக்கருவி யாழ் என்றும் தொல்காப்பியத்தில் இருவகை இசைக்கருவிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர், தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையியல் 18 ஆம் நூற்பா தமிழர் வாழ்க்கை நெறியின் அடிப்படைப் பண்பாட்டுக் கருவூலங்களைக் குறிப்பிடுகிறது.
“ தெய்வ முணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப "
இங்கு தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, யாழ் ஆகிய பொருள்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்த ஏழும் தமிழர் பண்பாட்டுக் கருப்பொருள்கள். ஏழு கருப்பொருளில் ஒன்று யாழ். மற்றொன்று பறை.
தொல்காப்பியம் கூறும் ‘யாழ்’ என்னும் சொல் பழந்தமிழர் வகுத்த பண்ணிசையைக் குறிக்கும். இது மிடற்றிசை (குரலிசை), நரம்புக் கருவியிசை (யாழ் என்னும் தந்திக் கருவி இசை) காற்றுக் கருவியிசை (குழல் கருவியிசை)ஆகியவற்றின் முறைகளும் மரபுகளும் பற்றியதாகும். பண்வகைகளை ‘யாழின் பகுதி’ எனவும் இசைநூலை ‘நரம்பின் மறை’ எனவும் தொல்காப்பியர் குறித்துள்ளார். இதனால், பண்டைநாளில், நரம்புக் கருவியாகிய யாழினை அடிப்படையாகக் கொண்டே பண்களும் அவற்றின் திறங்களும் ஆராய்ந்து வகைப்படுத்தப்பட்டன என அறியலாம்.
முதன்மைக் கட்டுரை: பறை (இசைக்கருவி)
தொல்காப்பியர் கூறும் "பறை" என்னும் சொல் தாளம் பற்றியதாகும். அதாவது தாளத்தைக் கொட்டிக் கொடுக்கும் பல்வேறு தாளக்கருவிகளின் (percussion instruments) முறைகளும் மரபுகளும் பற்றியதாகும்.
ஐந்துதிணைக்குரிய பண்களும், அதற்குரிய காலமும்
நிலத்தை ஐந்தாக வகுத்துக் கொண்ட தமிழர் அந்தந்த நிலத்துக்குரிய இசையை உருவாக்கினர். தொல்காப்பியர் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களுக்கும் உரிய தொழில் இசையையும, இன்ப இசையையும் தெளிவாக வகுத்து வைத்துள்ளார். பண் இசைப்பதற்குரிய பொழுதையும் வரையறை செய்துள்ளார்.
நிலம் இசைத்த பண் இசைத்த யாழ் முழக்கிய பறை தொழுத தெய்வம் பண்ணிற்குரிய சிறுபொழுது
குறிஞ்சி குறிஞ்சிப்பண் குறிஞ்சி யாழ் வெறியாட்டுப் பறை,
தொண்டகப் பறை சேயோன் என்னும்முருகன் யாமம் அல்லது நள்ளிரவு
முல்லை முல்லைப்பண் முல்லையாழ் ஏறுகோட்பறை மாயோன் என்றதிருமால் மாலை
மருதம் மருதப்பண் மருத யாழ் நெல்லரி, மணமுழவு வேந்தன் என்றஇந்திரன் விடியல்
நெய்தல் செவ்வழிப் பண் விளரி, யாழ் மீன் கோட் பறை வருணன் ஏற்பாடு
பாலை பாலைப்பண் பாலை யாழ் துடி கொற்றவை நண்பகல்
இசை என்ற சொல் தொல்காப்பியத்தில் 24 இடங்களில் வந்துள்ளது. இவை அனைத்தும் இசைக் கலையுடன் ஒரு வகையில் தொடர்பு உள்ளதாகவே அமைந்துள்ளது.
தொல்காப்பியர் குறிப்பிடும் பாட்டு, வண்ணம் ஆகிய சொற்கள் இசையோடு தொடர்புடைய ஆழ்ந்த பொருள் பொதிந்த சொற்களாகவே அமைந்துள்ளன. தொல்காப்பியர் வண்ணத்தை 20 வகையாகப் பிரித்துப் பெயர்களைச் சுட்டி நூற்பா இயற்றியுள்ளார். இவ்வண்ணங்களை வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம், இயைபு வண்ணம் என இசைத்தன்மையை உயர்த்தும் வகையில் அமைத்துள்ளார். தொல்காப்பியர் பாடல்களை அவற்றின் அமைப்பு, கருத்து மற்றும் இசைத்தன்மையைக் கொண்டு பாகுபாடு செய்துள்ளார். கலிப்பாவும், பரிபாடலும் இவ்வகையில் குறிப்பிடத்தகுந்தன, பரிபாட்டு என்பது இசைப்பா என பேராசிரியர் குறிப்பிடுகிறார். பிசியைப் போன்ற இயல்புடையதாகப் பண்ணத்தி என்னும் இசைப்பாடல் இருப்பதைத் தொல்காப்பியத்தின் வழி அறியலாம். ஊடல்தீர்க்கும் வாயில்களாகத் தொல்காப்பியர் குறிப்பிடும் பாணன், கூத்தன், பாடினி, விறலி ஆகியோர் இசையிலும் கூத்திலும் திறமை உடையவர்கள் என்பதைச் சங்க இலக்கியத்தின் வாயிலாக அறிய முடிகிறது.
தொல்காப்பியத்தில் பறை,யாழ் என்பன வருகின்றன. ஆகவே, இன்றைக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்ற பறையே தமிழரின் ஆதியிசைக் கருவியென்பதும் உறுதியாகிறது. இந்தப் பறையோடும் யாழும் ஆதி இசைக் கருவியே. அத்தோடு குழலும் சேர்கிறது.இதிலிருந்து தமிழிசை தனித்துவ மரபுகளோடு மட்டுமன்றி மரபு சார்ந்த இசைக்ருவிகளோடும் உருவானது என்பது உறுதியாகிறது. பண்டையத் தமிழ் இசை நூல்களில் இசைக்கருவிகள் பற்றி விரிவாக எழுதப்பட்டிருக்கின்றன. பறை எனப்படும் தோற்கருவியும், வங்கியம் அல்லது குழல் எனப்படும் துளைக்கருவிகளும், யாழ் எனப்படும் நரம்புக்கருவிகளும், மண் வெண்கலத்தால் செய்யப்படும் கஞ்சக்கருவிகள் என்பன 2000 ஆண்டுகட்கு முன்னரே அறியப் பெற்று அவற்றுக்கு இலக்கணம் எழுதப்பட்டிருக்கிறது.
உலக இசை வரலாற்றில் தமிழ் இசையே மிகத் தொன்மையான சிறந்த இசை இலக்கணப் பண்பாடுகளுடன் கூடிய இசையாகத் திகழ்ந்தது என்பதற்கு ஆதாரமாகப் பல இலக்கிய வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. மத்தளம், யாழ், குழல் ஆகிய மூன்றையும் சங்கக் காலத்தில் இசைக்கருவிகளாகக் கொண்டிருந்தார்கள். யாழ் என்னும் இசைக்கருவி பண்டையக் காலத்தில் தமிழ் மண்ணில் சிறப்பாக வழங்கி வந்தது.அது உலக இசைக் கருவியாக இருந்தது. உலக நாகரிகங்களுக்கெல்லாம் முன்னோடியாய்த் திகழ்ந்த சிந்துவெளி நாகரிகத்தைப் புலப்படுத்தும் மொகஞ்சதாராவிலும் அரப்பாவிலும் தமிழர் கண்ட யாழ் இருந்ததை அங்கு இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள முத்திரைகளில் அறியப்படுகின்றது.
இசை மற்றும் இலக்கியபணியில்,