Sunday 25 February 2018

பரிசுத்த ஆராதனை, இசை பயிற்சி கூடமா???

சுரமண்டலத்தினால் கர்த்தரைத் துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்.

அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்தசத்தத்தோடே வாத்தியங்களை நேர்த்தியாய் வாசியுங்கள்.
சங்கீதம் 33:2,3


இந்த வசனம் இரண்டும் பாடல் ஆராதனை நடத்தும் ஆராதனை வீரர்கள் மற்றும் இசை கருவிகளை மீட்டுவோர் மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஓய்வுநாள் காலை வேளைகளில், நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் இசைக்கருவி மீட்டுவதற்கான அழைப்பு பெற்று, பயணிப்பது வழக்கம். நாகர்கோவிலை பொருத்தமட்டில் (நான் அறிந்த வரையில்) காலை 5:45 மணிமுதல் ஓய்வுநாள் ஆராதனை துவங்குகிறது. எனவே, பயணத்தின் இடையே நிச்சயமாக சில சபைகளில் பாடி, இசைக்கருவிகள் மீட்டுவதை கேட்க முடியும். சில சபைகளில் மிகவும் நேர்த்தியாக சிறந்த முறையில் பாடல் குழுவினர் பாடி ஆராதனை செய்யும் போது, எனது வாகனம் நகர மறுத்தும், காதுகள் இரசிக்கவும், ஆத்துமா தேவ பிரசன்னத்தை உணரவும் மறுப்பதில்லை... இது போன்று நிகழும் போது வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, அப்போது என்னை குறுக்கிட்ட அந்த பாடல் முடியும் வரையாவது, அங்கு நின்று இரசித்து விட்டு செல்வேன்...

சில சபைகளில் பாடல் குழுவினர் ஒரு சுருதியிலும், விசுவாசிகள் வேறு சுருதியிலும், இதை கேட்டு பொருக்க முடியாமல் போதகர் புதிக இசை கருவியில் இடம்பெறாத வேறு சுருதியிலும், இசைக்கருவிகள் மீண்டுபவர்கள், அவர்களுக்கு தெரிந்த அந்த ஒரே சுருதியிலுமென மிகவும் அற்புதமான இரைச்சலை உருவாக்கி, உள்ளே இருக்கும் ஓரிருவரையும், அந்த பகுதியில் வாழ்வோரையும், தவறாமல் தொந்தரவு செய்து கெண்டிருப்பார்கள்...

வேறு சில சபைகளில் பாடல் புத்தகங்களில் கொடுக்க பட்டுள்ள ரிதம், ஸ்கேல் பார்த்து ரிதம் ஸ்டைல் மட்டும் கீபோர்ட்-ல் மீட்டி பாடுவார்கள். ஏனெனில் நல்ல முறையில் இசை மீட்டுவோர் இல்லை என்பர். ஆனால் ஒரு இசை கலைஞனை அழைத்தால், அவனுக்கும் வயிறு உண்டு என்பதை யோசிக்காமல், இசை மீட்டி முடிந்த உடன் கை கொடுத்து கர்த்தர் உங்களை உயர்த்துவார் என போலியாக ஆசீர்வதித்து, போக்குவரத்து செலவுக்கு கூட ஈடாகாத தொகையை காணிக்கை என்று திணித்தால், நல்ல இசை கலைஞர்கள் திரையிசையை தேடுவதை எப்படி தடுக்க முடியும்??? நம்மிடம் எப்படி நல்ல இசை கலைஞர்கள் வாழ முடியும்??? 

அது மட்டுமா, பிரபல ஆராதனை வீரர்கள் நடத்தும் பிரமாண்ட கிறிஸ்தவ இசை நிகழ்ச்சிகளில் நம்மிடம் தரமான இசை கலைஞர்கள் இருந்தும், சினிமாவில் மீட்டும் இசை கலைஞர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தவறான மாதிரியை காட்டுவதும், தரமான இசை கலைஞர்களின் பார்வை திரை இசையை நோக்கி நகர காரணமாகிறது. 

இதைப்பற்றி பிறகு ஒரு கட்டுரை எழுதலாம்....
எங்கே, வாத்தியங்களை நேர்த்தியாக மீட்டி, தாளம் மற்றும் சுருதி தவறின்றி பாடி, சிறப்பான ஆராதனை நடைபெறுகிறதோ, அங்கே கேரூபீன்கள், சேராபீன்களின் இசையின் நடுவில் வசிக்கும் தேவன் அசைவாடுவது நிச்சயம். அங்கே அற்புத அடையாளங்கள் நடைபெறும். அங்கே சபை வளர்ந்து பெருகும். இதுவே தேவன் விரும்பும் புத்தியுள்ள ஆராதனை ஆகும்.

தேவன் விரும்பும் புத்தியுள்ள ஆராதனையாக நமது ஆராதனையை மாற்றுவது எப்படி???

1. இசை கருவிகளை மீட்டுபவர்கள் மற்றும் பாடல் ஆராதனை நடத்தும் முழு பாடல் குழுவும், இசையை நிச்சயமாக கற்க வேண்டும்..

2. பாடல் குழுவினர் மேடை ஏறுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் கூடி ஒருமனதாக ஜெபித்து, பாடல்களை தெரிந்தெடுக்க வேண்டும்.

3. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நபர் ஆராதனை நடத்த வேண்டும். ஒருவர் பொருப்பு எடுத்து இருக்கும் போது, அவர் தவறு செய்தால் கூட மற்றவர்கள் குறுக்கிட கூடாது. அவர் செய்த தவறுகளை திருத்தும் வழிகளை அடுத்த நாள் தனியாக பாசத்தோடு கற்பிக்கலாம். ஒரே நபர் செய்தால் பெருமை உருவாக வழி வகுக்கும். பார்வையாளர்கள் மத்தியில் சலிப்பு ஏற்படும்; புதிய தலைவர்கள் உருவாகுவதை தடுக்கும்.

4. குறைந்த பட்சம் 2 நாட்களுக்கு முன் பாடல்கள் மற்றும் அந்த பாடலுக்கான சுருதி (ஸ்கேல்) மற்றும் தாளம் (ரிதம் ஸ்டைல்) தேர்வு செய்து ஒரு நாளாவது அனைவரும் சுய பயிற்சி மேற்கொள்ள வேண்டும். வாத்தியங்களை மீட்டுபவர்கள், chords, drum kit, voice, bgm அல்லது அந்த பாடலுக்கான இசை கருவிகளை தேர்வு செய்து பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பின்னர் குழுவாக இணைந்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

5. எவ்வளவு திறமையும் தாலந்தும் தேவனால் பெற்றிருந்தாலும், பயிற்சி இல்லாமல் மேடை ஏறுவது தோல்வியின் துவக்கமே..

6. எந்த பாடலை எங்கே பாட வேண்டும், பாடலில் என்ன புதுமைகள் செய்ய வேண்டும், முன்னிசை, இடையிசை எப்படி அமைக்க வேண்டும் என பயிற்சி வேளையில் முடிவு செய்ய வேண்டும்..

7. புதிய பாடல்களை குழுவினர் அனைவரும் படித்த பின்னரே மேடையில் பாட வேண்டும். இயன்றவரை பாடல் வரிகளை மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ளவும்..

8. குழுவினர் அனைவரும் சிரமமின்றி பாடும் சுருதியை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.

9. பாட வேண்டிய பாடலை மேடையில் முடிவெடுக்க கூடாது. 
(சிலர் மேடையில் தனக்கு தோணும் பாடலை பாடி விட்டு ஆவியானவர் நடத்தினார் என்று ஓட்டுவார்கள், ஆராதனை நாம் தேவனுக்கு செலுத்துவது. நாம் ஒன்றை தயார் செய்து வைத்திருக்கும் போது தயாராகாத ஒன்றை ஏவும் அளவிற்கு பரிசுத்த ஆவியானவர் முட்டாளல்ல. எந்த பாடலிலும் அவருடைய கிரியைகளை நடப்பிக்க அவருக்கு எந்த தடையும் இல்லை. அப்படியே வேறு பாடல் பாட வேண்டுமென்றால் அதை பயிற்சிக்கு முன் ஜெபித்து ஆயத்தபடும் போது மட்டுமே தேவன் உணர்த்துவார்.)

10. ஏற்கனவே பாடிய பாடலை மறுமுறை தேர்வு செய்யும் பொழுது, தெரிந்த பாடல் தானே என்று நிர்விசாரமாக இருக்காமல், இந்த முறை அதில் என்ன புதுமைகள் செய்ய முடியும் என்பதை ஆராய்ந்து, அதை பயிற்சி செய்து, பின் மேடையில் வித்யாசத்தை காட்ட முயல வேண்டும்.

11. பாராட்டுக்கள் கிடைக்கும் போது நாம் வளர்ந்து விட்டோம் என்று கர்வம் கொள்ளாமல், தேவனுக்கு நன்றி கூறி, பாராட்டை பொறுப்பாக ஏற்று இன்னும் பயிற்சி செய்ய வேண்டும். ஏனெனில் பாராட்டுக்கள் சந்திரன் போன்றது. பாராட்டுக்கள் பொருமை கொடுத்தால் திறமை தேய்பிறை ஆகும். மாறாக தாழ்மையையும், பயிற்சியையும் கொடுத்தால் வளர்பிறையாக பிரகாசிக்கும்...

12. நாம் வளரும் போது கூடவே நமக்கு பின்னர் அந்த இடத்தை நிரப்ப குறைந்த பட்சம் 2 பேரையாவது உருவாக்க வேண்டும்.


இவைகளை பின்பற்றினால் தேவன் விரும்பும் புத்தியுள்ள ஆராதனையாக நமது ஆராதனை மாறுமென்பதில் ஐயமில்லை....

இசை மற்றும் இலக்கியபணியில்
J.E.ஜெபா

Saturday 24 February 2018

அந்த நிலாவ தான் lyric

"அந்த நிலாவ தான்… நான் கையில புடிச்சேன்… என் ராசாவுக்காக.... இசை பிறகு குரல் என்ற வழக்கமான பழக்கமான பாணியைப் பின்பற்றாமல், ஒரு பெண்குயிலின்தொடங்கியது பாடல். பாடலா அது? பாடல் ஆரம்பித்த பதினான்காவது வினாடியில் குழலும் வயலினும் தங்கள் ராஜாங்கத்தை ஆரம்பித்தன. இந்த பாடலை அந்த இசை ஞானியின் மனதிலும் விரல்களிலும் குரலிலும் கொண்டு வந்தற்க்கு  வணங்குகிறோம்... 
தமிழ் இனிது
குழல் இனிது
யாழ் இனிது
வயலின் இனது
ராஜாவின் இசை இனிது.ஆஹா! இளையராஜாவின் படங்களிலேயே புல்லாங்குழல் அதிகம் உபயோகப்படுத்தப்பட்ட படம்.

முதல் மரியாதை படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் ஆகி விட்டன.பாடல் வரிகள் இன்றும் ஏதோ ஒரு பயணத்தில் பின்னிரவு வானொலியில் நம் காதுகளில் தாலாட்டாய் கேட்டு கொண்டேதான் இருக்கிறது. கிராமத்து எளிய இசையினை இளையராஜாவும், எளிய வார்த்தை களால் காலத்தை வென்ற பாடல்களை வைரமுத்துவும் கொடுத்திருந்தார்கள்.

குடும்பகவுரத்திற்காக தன் சோகத்தை தன் மனதில் புதைத்து கொண்டு, சிரித்த முகத்தோடு வைராக்கிய வாழ்க்கை வாழும் ஒரு பெரியவர் மீது ஒரு இளம் பெண்ணுக்கு வரும் மரியாதை கலந்த உணர்ச்சியின் கதை அது.எத்தனை காலங்கள் கடந்தாலும்,  எத்தனை முறை பார்த்தாலும் கொஞ்சமும் சலிக்காத படம்.

எல்லா இடங்களிலும் வர முடியாது என இறைவன் தாயைப்படைத்தான். இறுதிவரை தாய் உடன்வர முடியாது என்பதாலேயே   மனிதன் தாரத்தையும் படைத்துக்கொண்டான். தாயன்பும், அதற்கு நிகரான தாரத்தின் அன்பும் எல்லாருக்கும் கிடைத்துவிடுவதில்லை. சில அதிர்ஷ்டசாலிகளுக்கு மட்டுமே இரண்டும் சரியாக அமைந்துவிடுகிறது. பலருக்கு ஒன்று கிடைத்தால் இன்னொன்று இல்லையென்றாகி விடுகிறது. நாற்பதுவயதை கடந்த நிலையிலும் ‘பாராட்ட..மடியில் வைத்துத் தாலாட்ட’ தாய்மடி தேடித்தவிப்பது கொடுமை. அத்தகைய ஒரு துரதிர்ஷ்டசாலியான மலைச்சாமி எனும் மனிதரின் கதை தான் முதல் மரியாதை... இதோ உங்களுக்காக! கேட்டு/பார்த்து மகிழுங்கள் 

 ┈┉❀••🌿🍁🌺🍁🌿
🎬 :முதல் மரியாதை-85
🎻 : இளையராஜா
🖌:  வைரமுத்து
🎤:இளையராஜா,சித்ரா
👥:  தீபன்,ரஞ்சனி
 ┈━❀••🌿🌺🌿••❀┉┈​​​​​​​​​​
பாடல் வரிகள்:
அந்த நிலாவ தான்… நான் கையில புடிச்சேன்… என் ராசாவுக்காக

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக 

 எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் கட்டுறேன்
எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் கட்டுறேன்
(அந்த நிலாவ தான்)

மல்லு வேட்டி கட்டி இருக்கு
அது மேல மஞ்ச என்ன ஒட்டி இருக்கு
முத்தழகி முத்தம் குடுக்க
அது மேல மஞ்ச வந்து ஒட்டிகிருச்சி
மார்கழி மாசம் பார்த்து மாருல குளிராச்சு
ஏதுடா வம்பா போச்சி லவுக்கையும் கெடயாது
சக்கம்பட்டி சேலை கட்டி பூத்திருக்கு பூஞ்சோலை
பூவு ஒன்னு காண்ணடிச்சா வண்டு வரும் பின்னால
எக்கு தப்பு வேணாம் ம்ம்..
(அந்த நிலாவ தான்) 

எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டறேன்
எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் கட்டுறேன்

(அந்த நிலாவ தான்) 

ரத்தினமே முத்தம் வைக்கவா
அதுக்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா
வெக்கதையும் ஒத்தி வைக்கவா
அதுக்காக மந்தையில பந்தி வைக்கவா
ஓடிவா ஓடை பக்கம் ஒளியலாம் மெதுவாக
அதுக்குள்ள வேணாமுங்க ஆளுக வருவாங்க
காத்தடிச்சா தாங்காதடி மல்லிகப்பூ மாராப்பு
கையிருக்கு காவலுக்கு வேணாமுங்க வீராப்பு
போடி புள்ள எல்லாம் டூப்பு….

https://youtu.be/VN6czx8ik5c

Friday 23 February 2018

மந்தையில் சேரா ஆடுகளே.​​​ Lyric

பாடல் :​ ​​​மந்தையில் சேரா ஆடுகளே.​​​
​பாடியவர் :​ அகஸ்டின் ஜெபக்குமார்.
​ஆல்பம் :​  இதயங்கள் அற்பணிக்கட்டும்.


மந்தையில் சேரா ஆடுகளே
எங்கிலும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
தேடுவோம் வாரீர் திருச்சபையே
மந்தையில் சேரா ஆடுகளே
அழைக்கிறார் இயேசு
அவரிடம் பேசு
நடத்திடுவார்
1. காடுகளில் பல நாடுகளில் என்
ஜனம் சிதறுண்டு சாகுவதா
பாடுபட்டேன் அதற்காகவுமே
தேடுவோர் யார் என் ஆடுகளை
2. சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு
எனை அங்கு கொண்டு செல்ல இங்கு ஆட்கள் உண்டு
அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்
இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர்
3. எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்
என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும்
என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்
இதை உன்னிடம் கேட்கிறேன் தர வேண்டும்

https://youtu.be/N9OmB70pg6Q

இசை மற்றும் இலக்கியபணியில்
J.E.ஜெபா

Thursday 22 February 2018

பிரசங்க குறிப்புகள்

கண் திறக்கப்பட்டவர்கள்

1. ஆதாம்-ஏவாள்​
அவர்கள் இருவருடைய
கண்களும் திறக்கப்
பட்டன.ஆதி.3:7.

2. ஆகார்​
தேவன் அவளுடைய
கண்களைத் திறந்தார்.
ஆதி.21:19.

3. பிலேயாம்​
அப்பொழுது கர்த்தர்
பிலேயாமின் கண்களை
திறந்தார்.எண்.22:31.

4. கேயாசி​
கர்த்தர் அந்த வேலைக்காரன்
கண்களைத் திறந்தார்.
2இராஜா.6:17.

5. பிறவிக்குருடன்​  பர்த்திமேயு
இயேசு அவன் கண்களைத் திறந்தார்.
லூக்.18:35-43.

6. எம்மாவூருக்குச்​ சென்ற சீஷர்கள்.​
அவர்கள் கண்கள்
திறக்கப்பட்டு அவரை
அறிந்தார்கள்.
லூக்.24:30,31.

7. பவுல்​
அவன் பார்வையடைந்து
எழுந்திருந்து
ஞானஸ்நானம்
பெற்றான்.

How to recover AIRCEL number


How to recover Ur AIRCEL number
must watch and share

ஏர்செல் வாடிக்கையாளர்கள்

UPC Code ஐ எடுக்க Network Settings க்கு சென்று Automatic / Manually என்று இருக்கும். இதில் Manually Select செய்து IND AIRTEL 2G ஐ தேர்ந்தெடுக்கவும். இதன் மூலம் UPC Code ஐ பெறலாம்.

ஏர்டெல் நெட்வொர்க்கை பயன்படுத்துவதால் Incoming / Outgoing calls பெற இயலாது. இது UPC Code எடுப்பதற்கான ஒரு மாற்று வழி மட்டுமே.

PORT 9876543210 to 1900 க்கு மட்டுமே SMS செல்லும். UPC Code 24 மணி நேரத்தில் பெறலாம். ஆனால் அனைத்து SMS களையும் Receive செய்து கொள்ளலாம்.

ஏதேனும் இடையூறு ஏற்படின் Mobile ஐ Switch Off செய்து On செய்யவும்

சந்தேகம் இருந்தால் வீடியோவை பாருங்கள்
https://youtu.be/w5NVHqgpvns

இசை மற்றும் இலக்கிபணியில்
J.E.ஜெபா

Monday 19 February 2018

போதருக்கு ஸ்தோத்திரம் சொல்ல வேண்டுமா??

ஆதி கிறிஸ்தவ சபையில், விசுவாசிகள் ஒருவரையொருவர் பார்க்கும் போது மாரநாதா என்று கூறி வாழ்த்துவது வழக்கம்... மாரநாதா என்பதற்கு நமது ஆண்டவர் வருகிறார் (Our Lord comes) என்று அர்த்தமாகும். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். – (யோவான் 14:3)

ஆனால் சமகாலத்தில் விசுவாசிகள், ஊழியர்களை பார்க்கும்போது, ஹலோ,  Praise the Lord, ஸ்தோத்திரம் என்று சொல்கிறார்கள். இதில் ஒரு போதகரையோ, அல்லது விசுவாசிகளையோ பார்த்து ஸ்தோத்திரம் என்று கூறி வாழ்த்துவது தவறான ஒன்றாகும்...

ஸ்தோத்திரம் என்பது சமஸ்கிருத வார்த்தை ஆகும்.  17-ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த சீகன்பால்க் என்பவரால் தான் முதலில் வேதாகமம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகியது. இதில் வெளிநாட்டவர்களுக்கு, தமிழ் கற்று கொடுத்து மொழிபொயர்ப்பில் உதவியாக இருந்தது பிராமண சமூகத்தைச் சேர்ந்த சகோதரர்கள். எனவே தமிழ் வேதாகமத்தில் அதிகமான சமஸ்கிருத வார்த்தைகள் உள்ளன. இதைப்பற்றி பிறகு ஒரு கட்டுரை எழுதலாம். ஸ்தோத்திரம் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு இணையான தமிழ் சொல் வந்தனம் என்பதாகும்.

சரி இப்போது போதகருக்கு ஸ்தோத்திரம் சொல்வது ஏன் தவறு என்று பார்ப்போம்...     
*ஸ்தோத்திரம் என்றால் ஒருவர் தனக்கு செய்த சொல்லொணா நன்மைக்காக, வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் வந்தனம் செய்வதேயாகும்..... இப்படி ஒரு நன்மை என்பது சிலுவையில் இயேசு செய்த நன்மையே. அதற்கு இணையாக எந்த ஊழியரும் தியாகம் செய்வதில்லை...

*துதிக்கும் கனத்திற்கும் பாத்திரர் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே. அவருக்கு செலுத்த வேண்டிய ஸ்தோத்திரத்தை ஒரு போதகரை பார்த்து ஸ்தோத்திரம் பாஸ்டர் என்று கூறுவதால் அது அந்த பாஸ்டருக்கு உரித்தாகிது.

எனவே, இனி சக விசுவாசிகள் மற்றும் ஊழியர்களை பார்க்கும்போது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று தமிழில் கூற பழகுவோம். அல்லது மாரநாதா என்று கூறி அவர் வருகையை எதிர்நோக்குவோம்..

Praise the lord pastor, praise the lord brother, praise the lord sister என்று கூறுவதும் இதே பொருளில் தவறாகுகிறது. இனி Praise the lord Jesus Christ அல்லது வெறுமனே praise the lord என்று கூறி வாழ்த்தி விட்டு, பிறகு சொல்லுங்க பாஸ்டர் என்று அடுத்த வாக்கியமாக தொடங்குங்கள். Lord என்ற பரிசுத்தமான வார்த்தையுடன் மனிதனை குறிக்கும் எந்த வார்த்தையையும் இணைக்க வேண்டாம்.

இசை மற்றும் இலக்கிபணியில்,
J.E.ஜெபா

Thursday 15 February 2018

ஈஸ்டர்

ஈஸ்டர்

கிரேக்க புராணக் கதையில், இஸ்தார் என்ற பெண் தெய்வம் தன் மகனையே மணந்து கொண்டதாகவும் இந்த அசுத்த தேவதை கிரேக்க, பாபிலோனிய பாரம்பரியத்தில் கடவுளாகவும் இருந்ததுள்ளது. இந்த இஸ்தார் தனது செத்துப்போன கணவனை உயிர்த்தெழ வைக்க 40 நாட்கள் உபவாசம் (விரதம்) இருந்து பின்னர் அவனை உயிருடன் மீட்டதாகவும் புராணம் கூறுகிறது.

இந்த இஸ்தார் தேவதையின் 40 நாள் விரதம் "லெந்து" நாட்களாகவும் இந்த அசுத்த தேவதையின் பெயரே "ஈஸ்டர்" எனவும் திருச்சபைக்குள் திட்டமிட்டு நுழைக்கப்பட்டது. இந்த பிசாசின் வஞ்சகத்தை பைபிளுடன் விவரமாக கோர்த்துவிடுவதற்கு வசமாக, இஸ்ரவேலர் (யூதர்) இன்றும் கடைபிடிக்கும் பஸ்கா பண்டிகை காலக் கனக்கையொட்டி நடைமுறைப்படுத்தி விசுவாசிகளை நம்ப வைத்தது ஆதிகால RC திருச்சபை.

முதல் நூற்றாண்டில் ஆதி திருச்சபையை வழிநடத்திய அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவின் பிறப்பு, இறப்பு, உயிர்ப்பு, வின்னேர்ற்பு போன்ற நிகழ்வுகளை விழாக்களாக அனுசரிக்கவும் இல்லை, புதிய உடன்படிக்கை கிறிஸ்தவர்கள் இந்த சடங்காசாரங்களை கடைபிடிக்கவும் அறிவுறுத்தவில்லை.  தங்கள் மாம்ச விருப்பப்படி பண்டிகை கடைபிடிப்பவர்களை கலாத்தியர் 3:1-3 இன் படி புத்தியில்லாத கலாத்தியர் போல் ஆவர்.

பலி செலுத்தும் நாட்களை மையமாக வைத்தே பல பண்டிகைகள் கொண்டாடப்பட்டது என பழைய உடன்படிக்கையில் காண்கிறோம்.

ஆனால் புதிய உடன்படிக்கையில் இயேசு ஒரே தரம் பலியாகி, அவர் சொன்னபடியே உயிர்தெழுந்து விண்ணகத்தில் வீற்றிக்கிறார்.

வேதத்தில் சொல்லபடாத இந்த சொல்லை பயன்ப்படுத்தும் பண்டிகையை கொண்டாடுவது எதற்கு சமமானது???

"மரித்தேன், ஆனாலும் இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்." (வெளி 1: 18). என்று சொல்லியபடி சதாகாலமும் உயிரோடிருக்கிற மெய்த்தேவமாகிய இயேசுவை வருடா வருடம் சாகடிப்பதும் பின்னர் உயிர்ப்பிப்பதும் வழக்கமாகி "ஈஸ்டர்" என்ற வேதத்திற்கு புறம்பாக ஒரு பண்டிகையை திருச்சபைகளும் விசுவாசிகளும் கொண்டாடுவது வேதனை அளிக்கிறது.

ஈஸ்டர் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஒரே மாதத்திலும் ஒரே தேதியிலும் வருவது இல்லை. ஒரு நபரின் பிறந்த நாள் மற்றும் இறந்த நாள் ஒருபோதும் எங்கேயும் எப்போதும் மாறாது. பிறை நிலவு தோன்றும் கணக்கை கடைபிடித்து கொண்டாடப்படுவதால் வருடா வருடம் வெவ்வேறு நாட்களில் வருகிறது.

இதிலிருந்தே இந்தப் பண்டிகை புற இனத்தாரின் விழா எனத் தெரியவில்லையா?

ஈஸ்டர் என்று சொல்லை பயன்ப்படுத்தாமல் "உயிர்த்தெழுந்த ஞாயிறு" என்று வருடத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமையோ அல்லது எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயேசுவின் உயிர்த்தெழுதலை கொண்டாடலாமே!!!

ஈஸ்டர் முட்டை என்று கொண்டடுவது அசிரிய காம தேவதையின் மகன் தமூஸ் இறந்த பிறகு 40 நாள்கள் எல்லோரும் நோன்பிருக்க 41வது நாள் முட்டையை உடைத்து கோழி குஞ்சு வெளியே வருவது போல தமூஸ் வருவான் என்பதே விளக்கம்....

ஆகவே, இந்த ஞாயிறு கர்த்தரின்  உயிர்த்தெழுதலை கொண்டாட விரும்பினால், ஈஸ்டர்
என்கிற பெயரை
சொல்லாமல்,
கர்த்தரின் உயிர்த்தெழுதலின்  பண்டிகை என்போம்.

வாழ்த்துக்கள் அனுப்பும் போதும்
Happy Easter
என்று சொல்லாமல்
Happy / Blessed Lord's Resurrection Day என்று வாழ்த்துவோம்..

சைவம் vs அசைவம்

சைவம் Vs அசைவம்


ஆட்டுக்கறியை விட மேலானது : வெண்பூசணிக்காய்

கோழிக்கறியை விட மேலானது : கோவைக்காய்

பன்றிக்கறியை விட மேலானது : முருங்கைக்காய்

மீன்கறியை விட மேலானது : வாழைக்காய்

ஒட்டகக்கறியை விட மேலானது : கொத்தவரங்காய்

நண்டுக்கறியை விட மேலானது : புடலங்காய்

ஆமைக்கறியை விட மேலானது : வெண்டைக்காய்

பாம்புக்கறியை விட மேலானது : பீர்கங்காய்

புறாக்கறியை விட மேலானது : சுரைக்காய்

மாட்டுக்கறியை விட மேலானது : தேங்காய்

முட்டையை விட மேலானது : கத்திரிக்காய்

எல்லா காய்கறியையும் விட மேலானது : அரசாணிக்காய்

சுவைக்காக அசைவம் சரி. ஆனால் ஆரோக்கியத்திற்காக அசைவம் என்பது உண்மையில்லை..



இசை மற்றும் இலக்கியபணியில்

உணவு அட்டவணை Food time table

உணவு அட்டவணை

நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொ ண்டு சுழன்று கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.

விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம்.

இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும்.
தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.

விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம்.

காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.

காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை வயிற்றின் நேரம்.

இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல் உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.

காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்.

காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும். நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.

முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம்.

இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.

பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணி வரை சிறு குடலின் நேரம்.

இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.

பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம்.

நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.

மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம்.

பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.

இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பெரிகார்டியத்தின் நேரம்.

பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber. இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.

இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர்
என்பது ஒரு உறுப்பல்ல.
உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை
இணைக்கும் பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.

இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம்.

இந்த நேரத்தில்தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.

இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம்.

இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது.
கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.

மிகவும் பயனுள்ள தகவல்கள்..அனைவரும் ஷேர் செய்தால் படிப்பவர் மிகப்பயன் பெறுவர்.

காதல்

அளி

அவத்தை

அணி

காயகம்

கைக்கிளை

சங்கம்

தகை

தட்பம்

தண்

தலைக்கை

தலையளி

தொழுதகு

நசை

நயம்

இவையெல்லாம் காதல் என்ற சொல்லுக்கு மாற்று சொற்கள்.

இவைகளை உங்கள் காதலியிடம் சொல்லி ஆச்சியப்படுத்துங்கள்.

Wednesday 14 February 2018

சிவலிங்கம்

சிவலிங்கம்


சிவலிங்க வரலாறு பலருக்கு தெரியும். தெரியாத சிலருக்கு....

தருக வனத்திலுள்ள பிருந்தை ரிஷிக்கு அழகான மனைவி. அவளைக் கண்டவுடன் சிவனுக்கு காமத்தீ பற்றிக்கொள்கிறது. அவளை அடைவதற்கு ஒரு திட்டம் தீட்டுகிறான். ஒரு நாள் அதிகாலை ரிஷி வீட்டின் வெளியே நின்று சேவலாக மாறி கூவுகிறான். ரிஷி பொழுது விடிந்துவிட்டது என நினைத்து கங்கைக்கு நீராட செல்கிறான். சிவன் ரிஷி உருவத்தில் குடிசைக்குள் நுழைந்து, ரிஷி மனைவியுடன் உடலுறவு கொள்கிறான். நன்கு அனுபவித்த பிறகு தப்பி ஓடிவிடுகிறான். வீடு திரும்பிய ரிஷி தன் மனைவியின் அலங்கோல நிலையைக் கண்டு, இந்நிலையை உண்டாக்கியவனின் ஆணுறுப்பு அறுந்துவிடக்கடவது என சாபம் கொடுக்கிறான். சிவனின் ஆணுறுப்பு அறுந்து வானுலகிலிருந்து பூமியை நோக்கி விழுந்துக்கொண்டிருக்கிறது. பூமி அழிந்துவிடும் என பயந்த தேவா்கள் பாா்வதியிடம் ஓடுகிறாா்கள். பாா்வதி சிவனின் ஆணுறுப்பு பூமியில் விழாதபடி தன் பெண்ணுறுப்பால் தாங்கிக்கொள்கிறாள். இப்படியாக பூமியை அழிவிலிருந்த காப்பாற்றிய ஆணுறுப்பை தனக்குள் வாங்கிய பெண்ணுறுப்பை குறிப்பிடுவதுதான் சிவலிங்கம்....!

 “சிவம்” என்றால் நாம் வைக்கும் படையல் என்று தான் பொருள். முதன் முதலில் சேவல்/கிடாயை வெட்டி படையல் வைத்தனர். அப்படையலில் இரத்தமும், சதையும் சிவப்பாகத்தனே இருக்கும். அதனால் தான் அப்படையலுக்கு சிவம் என்று பெயர். இந்த உண்மையை மறைக்க தான் நாயன்மார்கள் பாடிப் பாடியே சைவம் என்ற ஒன்றை வளர்த்தார்கள்.
சிவலிங்கம் என்றால் மேல் தோல் நீக்கப் பட்ட ஆண்குறி என்று தான் பொருள்.
சிவ + ஆள் + அங்கம் = சிவாளங்கம் => சிவாலிங்கம் => சிவலிங்கம்.
அதாவது சேவல்/கிடாய் வெட்டுக்கு ஒரு படி மேலே போய், பாலை நில ஆண்கள் தங்கள் ஆண்குறிகளின் மேல்தோலையே அறுத்துக் கொண்டு அதைப் படையலாக (சிவமாக) கொற்றவைக்கு வைத்தனர். இவ்வாறு மேல் தோல் நீக்கப்பட்ட (சுன்னத் செய்யப்பட்ட) ஆண்குறிக்குப் பெயர் தான் சிவலிங்கம்.
பலி கொடுத்து அதைப் படையல் வைப்பதற்குப் பெயர் தான் சிவவழிபாடு. இதை நாம் அடுத்த தலைமுறைக்கு ஒரு புத்தகத்தில் எழுதி வைத்துக் கடத்தவில்லை. ஆனால் ஒரு கல்லில் சிவலிங்கத்தைச் செதுக்கி வைத்து அடுத்த தலைமுறை ஆண்களுக்கு கொற்றவை வழிபாட்டின் நுட்பத்தைக் கடத்தி வந்தோம்.
இது மட்டும் அல்ல, நுட்பத்தைக் கடத்த சூலத்தையும் நாம் குல தெய்வக் கோவில்களில் நட்டு வைத்தோம்.இவை எல்லாம் எதற்கு என்றால் ஆண்கள் சிவவழிபாட்டை விட்டுவிடக் கூடாது என்பதால் அதை நினைவுப் படுத்திக் கொண்டே இருப்பதற்காகத் தானே தவிர கோவில் கட்டி கும்பாபிசேகம் செய்வதற்கு அல்ல.

1008 லிங்கம்

1 அகர லிங்கம் 
2 அக லிங்கம் 
3 அகண்ட லிங்கம் 
4 அகதி லிங்கம் 
5 அகத்திய லிங்கம் 
6 அகழ் லிங்கம் 
7 அகில லிங்கம் 
8 அகிம்சை லிங்கம் 
9 அக்னி லிங்கம் 
10 அங்கி லிங்கம் 
11 அங்கு லிங்கம் 
12 அசரிய லிங்கம் 
13 அசுர லிங்கம் 
14 அசை லிங்கம் 
15 அசோக லிங்கம் 
16 அச்சு லிங்கம் 
17 அஞ்சா லிங்கம் 
18 அட்ட லிங்கம் 
19 அட்ச லிங்கம் 
20 அட்சதை லிங்கம் 
21 அட்டோ லிங்கம் 
22 அடிமுடி லிங்கம் 
23 அடி லிங்கம் 
24 அணணா லிங்கம் 
25 அண்ட லிங்கம் 
26 அணி லிங்கம் 
27 அணு லிங்கம் 
28 அத்தி லிங்கம் 
29 அதழ் லிங்கம் 
30 அதிபதி லிங்கம் 
31 அதிர்ஷ்ட லிங்கம் 
32 அதிய லிங்கம் 
33 அதிசய லிங்கம் 
34 அதீத லிங்கம் 
35 அந்தார லிங்கம் 
36 அந்தி லிங்கம் 
37 அநந்தசாயி லிங்கம் 
38 அநலி லிங்கம் 
39 அநேக லிங்கம் 
40 அப்ப லிங்கம் 
41 அப்பு லிங்கம் 
42 அபய லிங்கம் 
43 அபி லிங்கம் 
44 அபிநய லிங்கம் 
45 அபிஷேக லிங்கம் 
46 அம்பல லிங்கம் 
47 அம்பி லிங்கம் 
48 அம்புசி லிங்கம் 
49 அம்ம லிங்கம் 
50 அமல லிங்கம் 
51 அமர லிங்கம் 52 அமராவதி லிங்கம் 53 அமிர்த லிங்கம் 54 அர்ச்சனை லிங்கம் 55 அர்ச்சுண லிங்கம் 56 அர்த்த லிங்கம் 57அரச லிங்கம் 58 அரவ லிங்கம் 59 அரங்க லிங்கம் 60 அரம்பை லிங்கம் 61 அரளி லிங்கம் 62 அரி லிங்கம் 63 அரிணி லிங்கம் 64 அரிமா லிங்கம் 65 அருக லிங்கம் 66 அருணை லிங்கம் 67 அருமணி லிங்கம் 68 அரும்பு லிங்கம் 69 அருளி லிங்கம் 70 அரூப லிங்கம் 71 அல்லி லிங்கம் 72 அலை லிங்கம் 73 அவைய லிங்கம் 74 அழகு லிங்கம் 75 அளத்தி லிங்கம் 76 அற லிங்கம் 77 அறிவு லிங்கம் 78 அன்பு லிங்கம் 79 அன்புரு லிங்கம் 80 அன்ன லிங்கம் 81 அனுதாபி லிங்கம் 82 அனுபூதி லிங்கம் 83 அஷ்ட லிங்கம் 84 ஆக்கை லிங்கம் 85 ஆகம லிங்கம் 86ஆகாய லிங்கம் 87 ஆசான லிங்கம் 88 ஆசிரிய லிங்கம் 89 ஆசி லிங்கம் 90 ஆட லிங்கம் 91 ஆடரி லிங்கம் 92 ஆண் லிங்கம் 93 ஆண்டி லிங்கம் 94 ஆணுரு லிங்கம் 95 ஆத்ம லிங்கம் 96 ஆதார லிங்கம் 97 ஆதி லிங்கம் 98 ஆதிரி லிங்கம் 99 ஆதிசேவி லிங்கம் 100 ஆதிரை லிங்கம் 101 ஆதினா லிங்கம் 102 ஆபேரி லிங்கம் 103 ஆமிர லிங்கம் 104 ஆமை லிங்கம் 105 ஆய லிங்கம் 106 ஆயதி லிங்கம் 107 ஆர்த்தி லிங்கம் 108 ஆரண்ய லிங்கம் 109 ஆரண லிங்கம் 110 ஆராதனை லிங்கம் 111 ஆராபி லிங்கம் 112 ஆரூர லிங்கம் 113 ஆரோக்ய லிங்கம் 114 ஆலகால லிங்கம் 115 ஆலவாய் லிங்கம் 116 ஆலால லிங்கம் 117 ஆலி லிங்கம் 118 ஆவார லிங்கம் 119 ஆவி லிங்கம் 120 ஆவே லிங்கம் 121 ஆவுடை லிங்கம் 122 ஆழி லிங்கம் 123 ஆனந்த லிங்கம் 124 இக்கு லிங்கம் 125 இசை லிங்கம் 126 இடப லிங்கம் 127 இணை லிங்கம் 128 இதய லிங்கம் 129 இந்திர லிங்கம் 130 இமய லிங்கம் 131 இமை லிங்கம் 132 இரட்டை லிங்கம் 133 இராம லிங்கம் 134 இலக்கிய லிங்கம் 135 இலாப லிங்கம் 136 இளைய லிங்கம் 137 இறவா லிங்கம் 138 இறை லிங்கம் 139 இனிமை லிங்கம் 140 ஈகை லிங்கம் 141 ஈசான்ய லிங்கம் 142 ஈட லிங்கம் 143 ஈடண லிங்கம் 144 ஈடித லிங்கம் 145 ஈடிலி லிங்கம் 146 ஈர்ப்பு லிங்கம் 147 ஈழ லிங்கம் 148 ஈஸ்வர லிங்கம் 149 ஈஸ்வரி லிங்கம் 150 உக்ர லிங்கம் 151 உச்சி லிங்கம் 152 உசித லிங்கம் 153 உடம்பி லிங்கம் 154 உடுக்கை லிங்கம் 155 உணர் லிங்கம் 156 உத்தம லிங்கம் 157 உத்ராட்ச லிங்கம் 158 உதய லிங்கம் 159 உதிர லிங்கம் 160 உப்பிலி லிங்கம் 161 உப்பு லிங்கம் 162 உப லிங்கம் 163 உபதேச லிங்கம் 164 உபய லிங்கம் 165 உமா லிங்கம் 166 உமை லிங்கம் 167 உயிர் லிங்கம் 168 உரி லிங்கம் 169 உரு லிங்கம் 170 உருணி லிங்கம் 171 உருமணி லிங்கம் 172 உவப்பு லிங்கம் 173 உழவு லிங்கம் 174 உழுவை லிங்கம் 175 உற்சவ லிங்கம் 176 உன்னி லிங்கம் 177 ஊக்க லிங்கம் 178 ஊசி லிங்கம் 179 ஊதா லிங்கம் 180 ஊருணி லிங்கம் 181 ஊழி லிங்கம் 182 ஊற்று லிங்கம் 183 எட்டி லிங்கம் 184 எட்டு லிங்கம் 185 எதனா லிங்கம் 186 எந்தை லிங்கம் 187 எம லிங்கம் 188 எருது லிங்கம் 189 எல்லை லிங்கம் 190 எளிய லிங்கம் 191 எழிலி லிங்கம் 192 எழுத்தறி லிங்கம் 193 என்குரு லிங்கம் 194 ஏக லிங்கம் 195 ஏகம லிங்கம் 196 ஏகா லிங்கம் 197 ஏகாம்பர லிங்கம் 198 ஏகாந்த லிங்கம் 199 ஏடக லிங்கம் 200 ஏந்திழை லிங்கம் 201 ஏம லிங்கம் 202 ஏர் லிங்கம் 203 ஏரி லிங்கம் 204 ஏவச லிங்கம் 205 ஏழிசை லிங்கம் 206 ஏறு லிங்கம் 207 ஏனாதி லிங்கம் 208 ஐங்கர லிங்கம் 209 ஐய லிங்கம் 210 ஐராவத லிங்கம் 211 ஒப்பிலா லிங்கம் 212 ஒப்பிலி லிங்கம் 213 ஒருமை லிங்கம் 214 ஒளி லிங்கம் 215 ஓசை லிங்கம் 216 ஓடேந்தி லிங்கம் 217 ஓம் லிங்கம் 218 ஓம்கார லிங்கம் 219 ஓவிய லிங்கம் 220 ஔடத லிங்கம் 221 ஔவை லிங்கம் 222 கங்கா லிங்கம் 223 கச்ச லிங்கம் 224 கண்ட லிங்கம் 225 கடம்ப லிங்கம் 226 கடார லிங்கம் 227 கடிகை லிங்கம் 228 கடை லிங்கம் 229 கதிர் லிங்கம் 230 கதலி லிங்கம் 231 கந்த லிங்கம் 232 கபால லிங்கம் 233 கபில லிங்கம் 234 கமல லிங்கம் 235 கயா லிங்கம் 236 கயிலை லிங்கம் 237 கர்ண லிங்கம் 238 கர்ப்ப லிங்கம் 239 கரண லிங்கம் 240 கரு லிங்கம் 241 கருட லிங்கம் 242 கருமை லிங்கம் 243 கருணை லிங்கம் 244 கல்ப லிங்கம் 245 கல்வி லிங்கம் 246 கலி லிங்கம் 247கலை லிங்கம் 248 கவி லிங்கம் 249 கற்பக லிங்கம் 250 கற்பூர லிங்கம் 251 கன்னி லிங்கம் 252 கன லிங்கம் 253 கனக லிங்கம் 254 கனி லிங்கம் 255 கஸ்தூரி லிங்கம் 256 கஜ லிங்கம் 257 கருணாகர லிங்கம் 258 காசி லிங்கம் 259 காஞ்சி லிங்கம் 260 காடக லிங்கம் 261 காத்த லிங்கம் 262 காதம்பரி லிங்கம் 263 காந்த லிங்கம் 264 காப்பு லிங்கம் 265 காம லிங்கம் 266 கார் லிங்கம் 267கார்த்திகைலிங்கம் 268 காரண லிங்கம் 269 கால லிங்கம் 270 காவி லிங்கம் 271காவிய லிங்கம் 272 காவேரி லிங்கம் 273 காளி லிங்கம் 274 காளத்தி லிங்கம் 275 காளை லிங்கம் 276 கான லிங்கம் 277கிண்கிணி லிங்கம் 278 கிரி லிங்கம் 279 கிரியை லிங்கம் 280 கிரீட லிங்கம் 281 கிருப லிங்கம் 282 கிள்ளை லிங்கம் 283 கீத லிங்கம் 284 கீர்த்தி லிங்கம் 285 கீர்த்தன லிங்கம் 286 குக லிங்கம் 287 குங்கும லிங்கம் 288 குஞ்சு லிங்கம் 289 குட லிங்கம் 290 குடுமி லிங்கம் 291 குண லிங்கம் 292 குணக்ரி லிங்கம் 293 குபேர லிங்கம் 294 குருதி லிங்கம் 295 குமர லிங்கம் 296 குமரி லிங்கம் 297 குமுத லிங்கம் 298 குல லிங்கம் 299 குழலி லிங்கம் 300 குழவி லிங்கம் 301 குழை லிங்கம் 302 குற்றால லிங்கம் 303 குன்று லிங்கம் 304 குண்டலி லிங்கம் 305 குந்த லிங்கம் 306 கும்ப லிங்கம் 307 குரவ லிங்கம் 308 குறிஞ்சி லிங்கம் 309 கூததாடி லிங்கம் 310 கூத்து லிங்கம் 311 கூர்ம லிங்கம் 312 கெஜ லிங்கம் 313 கேச லிங்கம் 314 கேசரி லிங்கம் 315 கேசவ லிங்கம் 316 கேடிலி லிங்கம் 317 கேதார் லிங்கம் 318 கேள்வி லிங்கம் 319 கைலாய லிங்கம் 320 கொங்கு லிங்கம் 321 கொடி லிங்கம் 322 கொடு லிங்கம் 323 கொளஞ்சி லிங்கம் 324 கொற்றை லிங்கம் 325 கொன்றை லிங்கம் 326 கோ லிங்கம் 327 கோகழி லிங்கம் 328 கோகுல லிங்கம் 329 கோட்டை லிங்கம் 330 கோடி லிங்கம் 331 கோண் லிங்கம் 332 கோண லிங்கம் 333 கோதண்ட லிங்கம் 334 கோதை லிங்கம் 335 கோப லிங்கம் 336 கோபி லிங்கம் 337 கோமதி லிங்கம் 338 கோல லிங்கம் 339 கௌசிக லிங்கம் 340 கௌதம லிங்கம் 341 கௌரி லிங்கம் 342 சக்தி லிங்கம் 343 சக்கர லிங்கம் 344 சகஸ்ர லிங்கம் 345 சகல லிங்கம் 346 சங்க லிங்கம் 347 சங்கம லிங்கம் 348 சங்கர லிங்கம் 349 சங்கு லிங்கம் 350 சஞ்சீவி லிங்கம் 351 சடாட்சர லிங்கம் 352 சடைமுடி லிங்கம் 353 சண்முக லிங்கம் 354 சத்திய லிங்கம் 355 சதங்கை லிங்கம் 356சதய லிங்கம் 357 சதா லிங்கம் 358 சதாசிவ லிங்கம் 359 சதுர் லிங்கம் 360 சதுர்த்தி லிங்கம் 361 சதுரங்க லிங்கம் 362 சதுரகிரி லிங்கம் 363 சந்த லிங்கம் 364 சந்திர லிங்கம் 365 சந்தன லிங்கம் 366 சந்தான லிங்கம் 367 சப்த லிங்கம் 368 சபா லிங்கம் 369 சம்பந்த லிங்கம் 370 சம்பு லிங்கம் 371 சமுத்திர லிங்கம் 372 சயன லிங்கம் 373 சர்வேஸ லிங்கம் 374 சரச லிங்கம் 375 சரீர லிங்கம் 376 சவரி லிங்கம் 377 சற்குண லிங்கம் 378 சஹான லிங்கம் 379 சற்குரு லிங்கம் 380 சாட்சி லிங்கம் 381 சாணக்ய லிங்கம் 382 சாதக லிங்கம் 383 சாதனை லிங்கம் 384 சாதி லிங்கம் 385 சாது லிங்கம் 386 சாந்த லிங்கம் 387 சாந்து லிங்கம் 388 சாம்ப லிங்கம் 389 சாமுண்டி லிங்கம் 390 சிகர லிங்கம் 391 சிகா லிங்கம் 392 சிகரி லிங்கம் 393 சிகை லிங்கம் 394 சிங்கார லிங்கம் 395 சிசு லிங்கம் 396 சித்தி லிங்கம் 397 சித்திரை லிங்கம் 398 சிந்தாமணிலிங்கம் 399 சிந்து லிங்கம் 400 சிநேக லிங்கம் 401 சிப்பி லிங்கம் 402 சிபி லிங்கம் 403 சிம்ம லிங்கம் 404 சிர லிங்கம் 405 சிரஞ்சீவி லிங்கம் 406 சிரபதி லிங்கம் 407 சிருஷ்டி லிங்கம் 408 சிலம்பு லிங்கம் 409 சிவ லிங்கம் 410 சிவகதி லிங்கம் 411 சிவாய லிங்கம் 412 சிற்பவ லிங்கம் 413 சினை லிங்கம் 414 சிஷ்ட லிங்கம் 415 சீதன லிங்கம் 416 சீதாரி லிங்கம் 417 சீமை லிங்கம் 418 சீர்மை லிங்கம் 419 சீற்ற லிங்கம் 420 சீனி லிங்கம் 421 சுக்கிர லிங்கம் 422 சுக லிங்கம் 423 சுகந்த லிங்கம் 424 சுகநிதி லிங்கம் 425 சுகுண லிங்கம் 426 சுடர் லிங்கம் 427 சுத்த லிங்கம் 428 சுதர்சண லிங்கம் 429 சுந்தர லிங்கம் 430 சுந்தரி லிங்கம் 431 சுப்பு லிங்கம் 432 சுமித்ர லிங்கம் 433 சுய லிங்கம் 434 சுயம்பு லிங்கம் 435 சுரபி லிங்கம் 436 சுருதி லிங்கம் 437 சுருளி லிங்கம் 438 சுரை லிங்கம் 439 சுவடி லிங்கம் 440 சுவடு லிங்கம் 441 சுவர்ண லிங்கம் 442 சுவாச லிங்கம் 443 சுவாதி லிங்கம் 444 சுனை லிங்கம் 445 சூட்சம லிங்கம் 446 சூர லிங்கம் 447 சூரி லிங்கம் 448 சூரிய லிங்கம் 449 சூல லிங்கம் 450 சூள்முடி லிங்கம் 451 சூளாமணி லிங்கம் 452 செக்கர் லிங்கம் 453 செங்கு லிங்கம் 454 செண்பக லிங்கம் 455 செந்தூர லிங்கம் 456 செம்ம லிங்கம் 457 செம்பாத லிங்கம் 458 செரு லிங்கம் 459 செருக்கு லிங்கம் 460 செல்வ லிங்கம் 461 செழுமை லிங்கம் 462 சேகர லிங்கம் 463 சேலிங்கம் 464 சேது லிங்கம் 465 சேர்ப்பு லிங்கம் 466 சேற்று லிங்கம் 467 சைல லிங்கம் 468 சைவ லிங்கம் 469 சொக்க லிங்கம் 470 சொப்பன லிங்கம் 471 சொர்க்க லிங்கம் 472 சொரூப லிங்கம் 473 சோம லிங்கம் 474 சோண லிங்கம் 475 சோபன லிங்கம் 476 சோலை லிங்கம் 477 சோழ லிங்கம் 478 சோழி லிங்கம் 479 சோற்று லிங்கம் 480 சௌந்தர்ய லிங்கம் 481 சௌந்தர லிங்கம் 482 ஞான லிங்கம் 483 தகழி லிங்கம் 484 தகு லிங்கம் 485 தங்க லிங்கம் 486 தச லிங்கம் 487 தட்சண லிங்கம் 488 தடாக லிங்கம் 489 தத்துவ லிங்கம் 490 தந்த லிங்கம் 491 தந்திர லிங்கம் 492 தமிழ் லிங்கம் 493 தர்பை லிங்கம் 494 தர்ம லிங்கம் 495 தருண லிங்கம் 496 தவ லிங்கம் 497 தளிர் லிங்கம் 498 தன லிங்கம் 499 தனி லிங்கம் 500 தவசி லிங்கம் 501 தாண்டக லிங்கம் 502 தாண்டவ லிங்கம் 503 தாமு லிங்கம் 504 தாய் லிங்கம் 505 தார லிங்கம் 506 தாழி லிங்கம் 507 தாழை லிங்கம் 508 தாள லிங்கம் 509 தான்ய லிங்கம் 510 தாரகை லிங்கம் 511 திக்கு லிங்கம் 512 திகம்பர லிங்கம் 513 திகழ் லிங்கம் 514 தியாக லிங்கம் 515 தியான லிங்கம் 516 திரி லிங்கம் 517 திரிபுர லிங்கம் 518 திரு லிங்கம் 519 திருமேனி லிங்கம் 520 திருவடி லிங்கம் 521 திருவாசக லிங்கம் 522 திருவாத லிங்கம் 523 திலக லிங்கம் 524 திவ்ய லிங்கம் 525 தீ லிங்கம் 526 தீட்சை லிங்கம் 527 தீர்க்க லிங்கம் 528 தீர்த்த லிங்கம் 529 தீப லிங்கம் 530 தீர லிங்கம் 531 தீர்ப்பு லிங்கம் 532 துதி லிங்கம் 533 துர்கை லிங்கம் 534 துருவ லிங்கம் 535 துலா லிங்கம் 536 துளசி லிங்கம் 537 துறவு லிங்கம் 538 தூங்கா லிங்கம் 539 தூண்டா லிங்கம் 540 தூமணி லிங்கம் 541 தூய லிங்கம் 542 தூளி லிங்கம் 543 தெங்கு லிங்கம் 544 தெய்வ லிங்கம் 545 தெரிவை லிங்கம் 546 தெளி லிங்கம் 547 தென்னவ லிங்கம் 548 தேக லிங்கம் 549 தேகனி லிங்கம் 550 தேகி லிங்கம் 551 தேச லிங்கம் 552 தேசு லிங்கம் 553 தேயு லிங்கம் 554 தேர லிங்கம் 555 தேவ லிங்கம் 556 தேவபத லிங்கம் 557 தேவாதி லிங்கம் 558 தேவு லிங்கம் 559 தேன் லிங்கம் 560 தேன்மணி லிங்கம் 561 தேன லிங்கம் 562 தேனுக லிங்கம் 563 தைரிய லிங்கம் 564 தொகை லிங்கம் 565 தொட்டி லிங்கம் 566 தொடி லிங்கம் 567 தொடைய லிங்கம் 568 தொண்டக லிங்கம் 569 தொண்டை லிங்கம் 570 தொல் லிங்கம் 571 தோகச லிங்கம் 572 தோண்டி லிங்கம் 573 தோணி லிங்கம் 574 தோத்திர லிங்கம் 575 தோரண லிங்கம் 576 தோரி லிங்கம் 577 தோழ லிங்கம் 578 தோன்ற லிங்கம் 579 தௌத லிங்கம் 580 தௌல லிங்கம் 581 நகமுக லிங்கம் 582 நகு லிங்கம் 583 நகை லிங்கம் 584 நங்கை லிங்கம் 585 நசை லிங்கம் 586 நஞ்சு லிங்கம் 587 நடன லிங்கம் 588 நடம்புரி லிங்கம் 589 நடு லிங்கம் 590 நதி லிங்கம் 591 நந்தி லிங்கம் 592 நம்பி லிங்கம் 593 நம லிங்கம் 594 நயன லிங்கம் 595 நர்மதை லிங்கம் 596 நலமிகு லிங்கம் 597 நவ லிங்கம் 598 நவமணி லிங்கம் 599 நவிர லிங்கம் 600 நற்குண லிங்கம் 601 நற்றுணை லிங்கம் 602 நறுமண லிங்கம் 603 நன்மணி லிங்கம் 604 நன்மை லிங்கம் 605 நனி லிங்கம் 606 நா லிங்கம் 607 நாக லிங்கம் 608 நாச்சி லிங்கம் 609 நாசி லிங்கம் 610 நாட லிங்கம் 611 நாடி லிங்கம் 612 நாத்திர லிங்கம் 613 நாத லிங்கம் 614 நாரண லிங்கம் 615 நாரணி லிங்கம் 616 நாரி லிங்கம் 617 நாபிச லிங்கம் 618 நாயன லிங்கம் 619 நாயாடி லிங்கம் 620 நாவ லிங்கம் 621 நாற்கர லிங்கம் 622 நான்மறை லிங்கம் 623 நான்முக லிங்கம் 624 நிகர் லிங்கம் 625 நித்தில லிங்கம் 626 நித்ய லிங்கம் 627 நிதர்சண லிங்கம் 628 நிதி லிங்கம் 629 நிபவ லிங்கம் 630 நிர்மல லிங்கம் 631 நிரஞ்சன லிங்கம் 632 நிரம்ப லிங்கம் 633 நிருதி லிங்கம் 634 நிமல லிங்கம் 635 நில லிங்கம் 636 நிலை லிங்கம் 637 நிவேத லிங்கம் 638 நிறை லிங்கம் 639 நிஜ லிங்கம் 640 நிசாக லிங்கம் 641 நீடு லிங்கம் 642 நீடுநீர் லிங்கம் 643 நீத்தவ லிங்கம் 644 நீதி லிங்கம் 645 நீர்ம லிங்கம் 646 நீரச லிங்கம் 647 நீரேறு லிங்கம் 648 நீல லிங்கம் 649 நீள்முடி லிங்கம் 650 நீறாடி லிங்கம் 651 நீறு லிங்கம் 652 நுதற் லிங்கம் 653 நுதி லிங்கம் 654 நூதன லிங்கம் 655 நெகிழ் லிங்கம் 656 நெஞ்சு லிங்கம் 657 நெட்ட லிங்கம் 658 நெடு லிங்கம் 659 நெய் லிங்கம் 660 நெற்றி லிங்கம் 661 நெறி லிங்கம் 662 நேச லிங்கம் 663 நேர் லிங்கம் 664 நைச்சி லிங்கம் 665 நைவேத்ய லிங்கம் 666 நொச்சி லிங்கம் 667 நோக்கு லிங்கம் 668 நோன்பு லிங்கம் 669 பசு லிங்கம் 670 பசுவ லிங்கம் 671 பசுபதி லிங்கம் 672 பஞ்ச லிங்கம் 673 பஞ்சாட்சர லிங்கம் 674 பட்டக லிங்கம் 675 படரி லிங்கம் 676 படிக லிங்கம் 677 பண்டார லிங்கம் 678 பண்டித லிங்கம் 679 பத்ம லிங்கம் 680 பத்ர லிங்கம் 681 பத்திர லிங்கம் 682 பதி லிங்கம் 683 பதிக லிங்கம் 684 பர்வத லிங்கம் 685 பரசு லிங்கம் 686 பரத லிங்கம் 687 பரம லிங்கம் 688 பரமாத்ம லிங்கம் 689 பரமேஸ்வர லிங்கம் 690 பரணி லிங்கம் 691 பரிதி லிங்கம் 692 பவண லிங்கம் 693 பவணி லிங்கம் 694 பவநந்தி லிங்கம் 695 பவழ லிங்கம் 696 பவாணி லிங்கம் 697 பவித்ர லிங்கம் 698 பளிங்கு லிங்கம் 699 பன்னக லிங்கம் 700 பனி லிங்கம் 701 பரகதி லிங்கம் 702 பராங்க லிங்கம் 703 பராபர லிங்கம் 704 பவநாச லிங்கம் 705 பா லிங்கம் 706 பாக்ய லிங்கம் 707 பாக லிங்கம் 708 பாச லிங்கம் 709 பாசறை லிங்கம் 710 பாசுர லிங்கம் 711 பாத லிங்கம் 712 பாதாள லிங்கம் 713 பாதி லிங்கம் 714 பாதிரி லிங்கம் 715 பார்வதி லிங்கம் 716 பாரதி லிங்கம் 717 பாராயண லிங்கம் 718 பாரி லிங்கம் 719 பாரிஜாத லிங்கம் 720 பாயிர லிங்கம் 721 பாலக லிங்கம் 723 பாலா லிங்கம் 723 பாவை லிங்கம் 724 பானு லிங்கம் 725 பாஷான லிங்கம் 726 பாகோட லிங்கம் 727 பாசுபத லிங்கம் 728 பாணிக லிங்கம் 729 பார்த்திப லிங்கம் 730 பாநேமி லிங்கம் 731 பாம்பு லிங்கம் 732 பாழி லிங்கம் 733 பிச்சி லிங்கம் 734 பிச்சை லிங்கம் 735 பிட்டு லிங்கம் 736 பிடரி லிங்கம் 737 பிடாரி லிங்கம் 738 பிடி லிங்கம் 739 பிண்ட லிங்கம் 740 பித்த லிங்கம் 741 பிதா லிங்கம் 742 பிம்ப லிங்கம் 743 பிரகதி லிங்கம் 744 பிரகாச லிங்கம் 745 பிரசன்ன லிங்கம் 746 பிரணவ லிங்கம் 747 பிரதர்சன லிங்கம் 748 பிரபாகர லிங்கம் 749 பிரபு லிங்கம் 750 பிரம்ம லிங்கம் 751 பிரம்பு லிங்கம் 752 பிரமிள லிங்கம் 753 பிராண லிங்கம் 754 பிராசித லிங்கம் 755 பிரிய லிங்கம் 756 பிரேம லிங்கம் 757 பிள்ளை லிங்கம் 758 பிழம்பு லிங்கம் 759 பிறவி லிங்கம் 760 பிறை லிங்கம் 761 பீச லிங்கம் 762 பீட லிங்கம் 763 பீடு லிங்கம் 764 பீத லிங்கம் 765 பீதகார லிங்கம் 766 பீதசார லிங்கம் 767 பீதமணி லிங்கம் 768 பீதாம்பர லிங்கம் 769 பீர லிங்கம் 770 பீம லிங்கம் 771 புகழ் லிங்கம் 772 புங்கவ லிங்கம் 773 புங்கவி லிங்கம் 774 புடக லிங்கம் 775 புண்ணிய லிங்கம் 776 புத்தி லிங்கம் 777 புத்ர லிங்கம் 778 புதிர் லிங்கம் 779 புது லிங்கம் 780 புரட்சி லிங்கம் 781 புரவு லிங்கம் 782 பராண லிங்கம் 783 புரி லிங்கம் 784 புருஷ லிங்கம் 785 புருவ லிங்கம் 786 புலரி லிங்கம் 787 புலி லிங்கம் 788 புவன லிங்கம் 789 புற்று லிங்கம் 790 புற லிங்கம் 791 புன்னை லிங்கம் 792 புனித லிங்கம் 793 புனை லிங்கம் 794 புஜங்க லிங்கம் 795 புஷ்கர லிங்கம் 796 புஷ்ப லிங்கம் 797 பூசனை லிங்கம் 798 பூத லிங்கம் 799 பூதர லிங்கம் 800 பூதி லிங்கம் 801 பூபதி லிங்கம் 802 பூபால லிங்கம் 803 பூதவணி லிங்கம் 804 பூர்ண லிங்கம் 805 பூர்த்தி லிங்கம் 806 பூர்வ லிங்கம் 807 பூரணி லிங்கம் 808 பூமித லிங்கம் 809 பூமுக லிங்கம் 810 பூவிழி லிங்கம் 811 பூலோக லிங்கம் 812 பூஜித லிங்கம் 813 பெண் லிங்கம் 814 பெண்பாக லிங்கம் 815 பெரு லிங்கம் 816 பேரின்ப லிங்கம் 817 பேழை லிங்கம் 818 பைரவி லிங்கம் 819பொன்னம்பலலிங்கம் 820 பொன்னி லிங்கம் 821 பொருந லிங்கம் 822 பொருப்பு லிங்கம் 823 பொழி லிங்கம் 824 பொய்கை லிங்கம் 825 போக லிங்கம் 826 போதக லிங்கம் 827 போதன லிங்கம் 828 போதி லிங்கம் 829 போற்றி லிங்கம் 830 போனக லிங்கம் 831 பௌதிக லிங்கம் 832பௌர்ணமி லிங்கம் 833 மகர லிங்கம் 834 மகவு லிங்கம் 835 மகா லிங்கம் 836 மகிழ லிங்கம் 837 மகுட லிங்கம் 838 மகுடி லிங்கம் 839 மகேச லிங்கம் 840 மகேஸ்வர லிங்கம் 841 மங்கள லிங்கம் 842 மஞ்சரி லிங்கம் 843 மஞ்சு லிங்கம் 844 மண லிங்கம் 845 மணி லிங்கம் 846 மதன லிங்கம் 847 மதி லிங்கம் 848 மந்தாரை லிங்கம் 849 மந்திர லிங்கம் 850 மயான லிங்கம் 851 மயூர லிங்கம் 852 மரகத லிங்கம் 853 மருக லிங்கம் 854 மருத லிங்கம் 855 மருது லிங்கம் 856 மலர் லிங்கம் 857 மழலை லிங்கம் 858 மவுலி லிங்கம் 859 மன்னாதி லிங்கம் 860 மனித லிங்கம் 861 மனோ லிங்கம் 862 மலை லிங்கம் 863 மாங்கல்ய லிங்கம் 864 மாசறு லிங்கம் 865 மாசி லிங்கம் 866 மாசிவ லிங்கம் 867 மாட்சி லிங்கம் 868 மாணிக்க லிங்கம் 869 மாதங்கி லிங்கம் 870 மாதவ லிங்கம் 871 மாதவி லிங்கம் 872 மாது லிங்கம் 873 மாதேவி லிங்கம் 874 மாமிச லிங்கம் 875 மாயை லிங்கம் 876 மாலை லிங்கம் 877 மார்க்க லிங்கம் 878 மிசை லிங்கம் 879 மிண்டை லிங்கம் 880 மீளி லிங்கம் 881 மீன லிங்கம் 882 முக்கனீ லிங்கம் 883 முக்தி லிங்கம் 884 முகுந்த லிங்கம் 885 முடி லிங்கம் 886 முத்து லிங்கம் 887 மும்மல லிங்கம் 888 முரசு லிங்கம் 889 முருக லிங்கம் 890 முல்லை லிங்கம் 891 முனி லிங்கம் 892 மூர்த்தி லிங்கம் 893 மூல லிங்கம் 894 மெய் லிங்கம் 895 மேக லிங்கம் 896 மேதினி லிங்கம் 897 மேவி லிங்கம் 898 மேனி லிங்கம் 899 மொழி லிங்கம் 900 மொட்டு லிங்கம் 901 மோட்ச லிங்கம் 902 மோன லிங்கம் 903 மோலி லிங்கம் 904 மௌன லிங்கம் 905 யதி லிங்கம் 906 யாக லிங்கம் 907 யாசக லிங்கம் 908 யாத்திரை லிங்கம் 909 யுக்தி லிங்கம் 910 யுவ லிங்கம் 911 யோக லிங்கம் 912 யோகி லிங்கம் 913 ரகசிய லிங்கம் 914 ரம்ய லிங்கம் 915 ரமண லிங்கம் 916 ரத்தின லிங்கம் 917 ரத லிங்கம் 918 ராக லிங்கம் 919 ராட்சச லிங்கம் 920 ராவண லிங்கம் 921 ராஜ லிங்கம் 922 ரிஷப லிங்கம் 923 ரிஷி லிங்கம் 924 ருத்ர லிங்கம் 925 ரூப லிங்கம் 926 ரௌத்திர லிங்கம் 927 லகரி லிங்கம் 928 லாவண்ய லிங்கம் 929 லீலா லிங்கம் 930 லோக லிங்கம் 931 வசந்த லிங்கம் 932 வஞ்சி லிங்கம் 933 வடுக லிங்கம் 934 வர்ம லிங்கம் 935 வர லிங்கம் 936 வருண லிங்கம் 937 வல்லப லிங்கம் 938 வழக்கு லிங்கம் 939 வள்ளுவ லிங்கம் 940 வளர் லிங்கம் 941 வன லிங்கம் 942 வனப்பு லிங்கம் 943 வஜ்ர லிங்கம் 944 வாகை லிங்கம் 945 வாசி லிங்கம் 946 வாணி லிங்கம் 947 வாயு லிங்கம் 948 வார்ப்பு லிங்கம் 949 வாழ்க லிங்கம் 950 வான லிங்கம் 951 வானாதி லிங்கம் 952 வார்சடை லிங்கம் 953 விக்ர லிங்கம் 954 விக்ரம லிங்கம் 955 விகட லிங்கம் 956 விகார லிங்கம் 957 விகிர்த லிங்கம் 958 வசித்ர லிங்கம் 959 விடங்க லிங்கம் 960 வித்தக லிங்கம் 961 விதி லிங்கம் 962 விது லிங்கம் 963 விந்தை லிங்கம் 964 விநாசக லிங்கம் 965 விபீஷ்ண லிங்கம் 966 விபூதி லிங்கம் 967 விமல லிங்கம் 968 வியூக லிங்கம் 969 விருட்சக லிங்கம் 970 வில்வ லிங்கம் 971 விளம்பி லிங்கம் 972 விழி லிங்கம் 973 வினைதீர் லிங்கம் 974 வினோத லிங்கம் 975 விஜய லிங்கம் 976 விஷ்ணு லிங்கம் 977 விஸ்வ லிங்கம் 978 விஸ்வேஸ்வரலிங்கம் 979 வீர லிங்கம் 980 வீணை லிங்கம் 981 வெற்றி லிங்கம் 982 வெற்பு லிங்கம் 983 வெள்ளி லிங்கம் 984 வேங்கட லிங்கம் 985 வேங்கை லிங்கம் 986 வேட்டுவ லிங்கம் 987 வேத லிங்கம் 988 வேதாந்த லிங்கம் 989 வேம்பு லிங்கம் 990 வேழ லிங்கம் 991 வேள்வி லிங்கம் 992 வைகை லிங்கம் 993 வைர லிங்கம் 994 வைத்திய லிங்கம் 995 வைய லிங்கம் 996 ஜடா லிங்கம் 997 ஜதி லிங்கம் 998 ஜல லிங்கம் 999 ஜீவ லிங்கம் 1000 ஜெக லிங்கம் 1001 ஜெய லிங்கம் 1002 ஜென்ம லிங்கம் 1003 ஜோதி லிங்கம் 1004 ஸ்ரீ லிங்கம் 1005 ஸோபித லிங்கம் 1006 ஹேம லிங்கம் 1007 ஐஸ்வர்ய லிங்கம் 1008 சுப லிங்கம்