Thursday 15 February 2018

ஈஸ்டர்

ஈஸ்டர்

கிரேக்க புராணக் கதையில், இஸ்தார் என்ற பெண் தெய்வம் தன் மகனையே மணந்து கொண்டதாகவும் இந்த அசுத்த தேவதை கிரேக்க, பாபிலோனிய பாரம்பரியத்தில் கடவுளாகவும் இருந்ததுள்ளது. இந்த இஸ்தார் தனது செத்துப்போன கணவனை உயிர்த்தெழ வைக்க 40 நாட்கள் உபவாசம் (விரதம்) இருந்து பின்னர் அவனை உயிருடன் மீட்டதாகவும் புராணம் கூறுகிறது.

இந்த இஸ்தார் தேவதையின் 40 நாள் விரதம் "லெந்து" நாட்களாகவும் இந்த அசுத்த தேவதையின் பெயரே "ஈஸ்டர்" எனவும் திருச்சபைக்குள் திட்டமிட்டு நுழைக்கப்பட்டது. இந்த பிசாசின் வஞ்சகத்தை பைபிளுடன் விவரமாக கோர்த்துவிடுவதற்கு வசமாக, இஸ்ரவேலர் (யூதர்) இன்றும் கடைபிடிக்கும் பஸ்கா பண்டிகை காலக் கனக்கையொட்டி நடைமுறைப்படுத்தி விசுவாசிகளை நம்ப வைத்தது ஆதிகால RC திருச்சபை.

முதல் நூற்றாண்டில் ஆதி திருச்சபையை வழிநடத்திய அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவின் பிறப்பு, இறப்பு, உயிர்ப்பு, வின்னேர்ற்பு போன்ற நிகழ்வுகளை விழாக்களாக அனுசரிக்கவும் இல்லை, புதிய உடன்படிக்கை கிறிஸ்தவர்கள் இந்த சடங்காசாரங்களை கடைபிடிக்கவும் அறிவுறுத்தவில்லை.  தங்கள் மாம்ச விருப்பப்படி பண்டிகை கடைபிடிப்பவர்களை கலாத்தியர் 3:1-3 இன் படி புத்தியில்லாத கலாத்தியர் போல் ஆவர்.

பலி செலுத்தும் நாட்களை மையமாக வைத்தே பல பண்டிகைகள் கொண்டாடப்பட்டது என பழைய உடன்படிக்கையில் காண்கிறோம்.

ஆனால் புதிய உடன்படிக்கையில் இயேசு ஒரே தரம் பலியாகி, அவர் சொன்னபடியே உயிர்தெழுந்து விண்ணகத்தில் வீற்றிக்கிறார்.

வேதத்தில் சொல்லபடாத இந்த சொல்லை பயன்ப்படுத்தும் பண்டிகையை கொண்டாடுவது எதற்கு சமமானது???

"மரித்தேன், ஆனாலும் இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்." (வெளி 1: 18). என்று சொல்லியபடி சதாகாலமும் உயிரோடிருக்கிற மெய்த்தேவமாகிய இயேசுவை வருடா வருடம் சாகடிப்பதும் பின்னர் உயிர்ப்பிப்பதும் வழக்கமாகி "ஈஸ்டர்" என்ற வேதத்திற்கு புறம்பாக ஒரு பண்டிகையை திருச்சபைகளும் விசுவாசிகளும் கொண்டாடுவது வேதனை அளிக்கிறது.

ஈஸ்டர் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஒரே மாதத்திலும் ஒரே தேதியிலும் வருவது இல்லை. ஒரு நபரின் பிறந்த நாள் மற்றும் இறந்த நாள் ஒருபோதும் எங்கேயும் எப்போதும் மாறாது. பிறை நிலவு தோன்றும் கணக்கை கடைபிடித்து கொண்டாடப்படுவதால் வருடா வருடம் வெவ்வேறு நாட்களில் வருகிறது.

இதிலிருந்தே இந்தப் பண்டிகை புற இனத்தாரின் விழா எனத் தெரியவில்லையா?

ஈஸ்டர் என்று சொல்லை பயன்ப்படுத்தாமல் "உயிர்த்தெழுந்த ஞாயிறு" என்று வருடத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமையோ அல்லது எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயேசுவின் உயிர்த்தெழுதலை கொண்டாடலாமே!!!

ஈஸ்டர் முட்டை என்று கொண்டடுவது அசிரிய காம தேவதையின் மகன் தமூஸ் இறந்த பிறகு 40 நாள்கள் எல்லோரும் நோன்பிருக்க 41வது நாள் முட்டையை உடைத்து கோழி குஞ்சு வெளியே வருவது போல தமூஸ் வருவான் என்பதே விளக்கம்....

ஆகவே, இந்த ஞாயிறு கர்த்தரின்  உயிர்த்தெழுதலை கொண்டாட விரும்பினால், ஈஸ்டர்
என்கிற பெயரை
சொல்லாமல்,
கர்த்தரின் உயிர்த்தெழுதலின்  பண்டிகை என்போம்.

வாழ்த்துக்கள் அனுப்பும் போதும்
Happy Easter
என்று சொல்லாமல்
Happy / Blessed Lord's Resurrection Day என்று வாழ்த்துவோம்..

No comments:

Post a Comment