Friday 2 February 2018

வேதாகம கிரிக்கெட் செய்தி

ஆவிக்குரிய  விளையாட்டுச் செய்திகள்

பரலோக அணி மற்றும் சாத்தான் அணிகளுக்கிடையே கல்வாரியில் ✝  நடந்த ஒரு யுகக் கிரிக்கெட் போட்டி...

துவக்க ஆட்டக்காரரான ஆதாம், கீழ்ப்படியாமையினால் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்...

ஆபிரகாம் விசுவாசமாக விளையாடி 25 ரன்கள் எடுத்தார்...

ஈசாக்கு பயபக்தியாக விளையாடி ரன்களைக் குவித்தார்...

  யாக்கோபு தந்திரமாய் விளையாடி 20 ரன்கள் எடுத்தார்...

மோசே  சாந்தமாய் விளையாடி 35 ரன்கள் எடுத்தார்...

மிக  சிறப்பாக விளையாட ஆரம்பித்த சிம்சோன், தெலீலாள்  வீசிய பந்தில் கிளீன் போல்டு ஆனார்...

  அடுத்து களமிறங்கிய தாவீது  தலைவரின் இருதயத்துக்கு ஏற்றப்படி உண்மையாக விளையாடி 65 ரன்கள் குவித்தார்...
அவர் அடித்த பந்தை பத்சேபாள் பிடித்ததால் அவுட் ஆனார்...!

எலியா வைராக்கியமாய் விளையாடி 25 ரன்கள் எடுத்தபோதிலும் , யேசபேல் வீசிய மூர்க்கமான பந்தினால் சூரைச் செடியின் அருகில் சுருண்டு விழுந்தார்.

தானியேல் ஜெபத்தோடும் , உபவாசத்தோடும் விளையாடி அரை சதம் அடித்தார்...!

பரலோக அணி  தோல்வியை தழுவிடுமோ என்ற நிலையில் ,

களமிறங்கிய இயேசு கிறிஸ்து அதிக ரன்களைக் குவித்தார்...
💯ரன் வித்தியாசத்தில்
பரலோக அணி அமோக வெற்றிப் பெற்றது...!

பரலோக அணியை சேர்ந்தவர்கள் வெற்றிக்கொடியை அசைத்து ஆரவாரம் செய்தனர்....!

இயேசு கிறிஸ்து ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்...!

No comments:

Post a Comment