Tuesday 6 February 2018

தமிழ் பைபிளில் உள்ள சில கடின சொற்களுக்கான விளக்கம்....

அகத்தியம்* (எஸ் 4:8)
– *கட்டாயம், அவசியம்*

*அகரதமான* (ஏசா 14:15)
– *ஆழமான*

*அசங்கியம்* (எஸ்றா 9:11)
*– அருவருப்பு, தூய்மையின்மை*

*அசம்பி* (1 சாமு 21:5)
– *பயணிகள் தோட்பை* (அகராதி குறிப்பு)

*அஸ்திராயுதம்* (எரே 50:25,51:20)
– *அதிகபட்ச கோபத்தில் பிரயோகிக்கும் ஒரு கொடுமையான ஆயுதம்.*

*அஞ்சிக்கை* (ஓசி 3:5)
– *அச்சம், பயம்*

*அசூசம்* (புலம்பல் 1:9)
– *தீட்டு*

*அசுப்பு* (யோபு 9:23, எரோ 4:20)
– *சடுதியாக, திடீரென வருதல்*

*அபரஞ்சி பூஷணம்* (நீதி 25:12)
– *புடமிடப்பட்ட பொன்*

*அழுங்கு* (லேவி 11:30)
– *எறும்பு தின்னும் ஒருவித விலங்கு*

*அழிம்பு* (எரே 6:7)
– *கொள்ளையும், சூறையாடுதலும்*

*ஆரோகணம்* (சங் 120-134)
– *இசையில் மேலேறும் ஓர் சுருதி*

*இதமியம்* (நியா 18:20)
– *மகிழ்ச்சியோடு உடன்படுதல்*

*ஈசல் போடுதல்* (எரேமியா 25:9)
- *விசிலடித்தல் (விசிலடித்து நையாண்டி செய்தல்)*

*இளக்கரிப்பு* (ஏசா 42:4)
– *சோர்ந்து போதல்*

*உக்கல்* (ஆப 3:16)
– *உறுத்துப் போதல்*

*உசாவு துணை* (யோபு 26:3)
– *உற்ற துணைவன்*

*உம்பிளிக்கை* (எஸ்றா 9:12)
– *மானியமாக கொடுக்கப்பட்ட பொருள். ஆனால் இவ்விடத்தின அர்த்தம் (நித்திய சுதந்திரம்)*

*உறுமால்* (அப் 19:12)
– *கைக்குட்டை துணி*

*ஒற்தலாம்* (மத் 23:23,லூக் 11:42)
– *ஒரு தானிய வகை. (புதினா)*

*கடாட்சம்* (உன் 8:10)
– *அருட்பார்வை, கருணை பெறுதல்*

*ஏகோபித்து* (நியா 20:1)
– *ஒருமித்து*

*கட்டியக்காரன்* (தானி 3:4)
– *அரசு கட்டளையை ஊரில் பறைசாட்டுவோன்*

*கலாதி* (எஸ்றா 4:15)
– *கலகம், சண்டை, புரட்சி*

*கலிக்கம்* (வெளி 3:18)
– *கண்ணிலிடும் மருந்து*

*கிரியிருப்பவர்கள்* (2 இராஜா 14:14)
– *பிணைக் கைதிகள்*

*கறளை* (எரே 48:6)
– *பிரயோஜனமில்லாத*

*காங்கை* (ஏசா 25:5)
– *வெப்பம்*

*காய்மகாரம்* (1சாமு 18:9)
– *பொறாமை*

*கிரியாப்பிரமாணம்* (ரோம 3:27)
– *செயல்களில் முக்தியடைய முயற்சித்தல்*

*கிரித்தியங்கள்* (நியா 2:19)
– *தீய பழக்கங்கள், காலங்காலமாக விடாமல் வைத்திருக்கும் தீய கிரியைகள்*

*குருக்கு* (ஆதி 3:18)
– *நெருங்சில் செடி (அதிக முட்களை கொண்ட ஓர் தாவரம்)*

*குங்கிலியம்* (யாத் 30:34)
– *ஒருவகை நறுமணப் பொருள். (வெள்ளை குங்கிலியம், கருங்குங்கிலியம் என இரண்டு வகை இருப்பதாக தெரிகிறது)*

*குலாரி வண்டில்* (ஏசா 66:20)
– *மிருகங்கள் இழுத்துச்செல்லும் வண்டி பல்லாக்கு*

*கொறுக்கை* (ஏசா 19:6)
– *கோரைப்புல் / நாணல்*

*கொடி மாசி* (யோபு 38:37)
– *நிலையற்று அலையும் மேகங்கள்*

*கும்பு* (எசே 7:14)
– *ஜனக்கூட்டம்*

*கொம்மை* (நெகே 3:1,11)
– *இவ்வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. இவ்விடத்தில் பெரிய மதில்களின் மேல் ஏற்படுத்தப்படும் காவல் மாடங்கள் என பொருள்படும்.*

*கோரி* (யோபு 21:32)
– *கல்லறை, சமாதி*

*சாமாசி பண்ணும் தூதன்* (யோபு 33:23)
– *மத்தியஸ்தர், சமரசம் செய்பவர்*

*சம்பாரம்* (எசே 24:10)
– *உணவில் சேர்க்கப்படும் நறுமணப் பொருள்.*

*சலக்கரணை* (2 இராஜா 4:13)
– *கரிசணையோடு*

*சளுக்கு* (எரே 5:28)
– *நயமாக பேசுதல்*

*சன்னது* (எஸ்றா 7:11)
– *ஆவணம், கடிதம், அரசாணை*

*சர்ப்பனை* (அப் 25:3)
– *வஞ்சனை, பதுங்கி இருந்து தாக்குவதற்கு சூழ்ச்சி*

*சன்னதக்காரன்* (உபா 18:11)
– *பில்லி சூனிய, ஏவல் வேலை செய்கிறவன்*

*சுயம்பாகி* (ஆதி 40:1)
– *சமையற்காரன்*

*சீதளம்* (ஆதி 8:22)
– *பல அர்த்தங்கள் உண்டு. குளிர்ச்சி என்ற அர்த்தம்*

*சிரேஷ்டம்* (நாகூம் 3:8)
– *தலை சிறந்தது.*

*சொகுசா* (எசே 1:4,8:2)
– *துத்தநாகமும், செம்பும் கலந்த ஓர் உலோகம்.*

*சுணை* (எரே 51:27)
– *கூர்மையான முட்கள் போன்ற கொடுக்கு.*

*தகசுத்தோல்* (யாத் 25:5,26:14)
– *கடற்பசுவின் தோல், (நீர் நாய், நீர் பசு)*

*தஸ்திர அறை* (எஸ் 6:1)
– *பத்திரங்கள், அரசு ஆவணங்கள் வைக்கும் அறை*

தர்ப்பணம் (யாத் 38:8) – கண்ணாடி (வெண்கல கண்ணாடி)

தாக்கீது (தானி 6:7,8,12)  – ஆணை

No comments:

Post a Comment