Tuesday 4 September 2018

ஒரு துளி கடல்.

ஒரு துளி கடல்.

ஆசிரியர்: சாரதா. 
₹80.

கவிதாயினி சாரதா (Saradha Kannan) அவர்களின் கை வண்ணத்தில் #JE_Publication வெளியீடாக வந்திருக்கும் அழகிய கவிதை தொகுப்பு

இப்புத்தகத்தில்

தமிழ்த்தாய் வாழ்த்து
சூரிய வணக்கம்
குறிஞ்சி பூத்ததே
ஓர் அபாலையின் கதறல்
முதலை வாய்
நிறை மாத காதல்...
அன்பு மழை
வரம் ஒன்று தருவாயா..?
நதியின் கரை
ஒற்றுமை பிரியும் போது
தனித்துவம்
வெள்ளைக் காகிதம்
அழகிய கண்ணே
தொடு வானம் தொடும் நேரம்
மனம் பதைத்தால்
இப்படிக்கு பெற்றோர்
நிலையில்லா வானம்
சிப்பிக்குள் முத்து
சேர்த்து வச்ச ஆசையெல்லாம்
மனம் தொட்டு முத்தமிட்டால்
நல்லதோர் வீணை செய்தே
அவளே என்றும் என் தெய்வம்
விவசாயி
வெப்ப அளவு 61
வடை போச்சே
கவிஞனின் மனம்
கண்களால் தொட்ட காதல்
கருகிய மலர் சிரிக்கிறது
பார்வை
சரித்திரம்
ஜல்லிக்கட்டு
நாத்தினதின்னா
நண்டு கொழுத்தால்
கனவே கலையாதே.
நிமிர்ந்து நில்
துள்ளித்திரியாத பருவம்
ஏன்
மனதிற்குள் நீ
யார் குற்றம்
புதுக்கவிதை
எதிர் நீச்சல்
உண்மை நட்பு
இப்போ என்ன பண்ணுவ
நினைவே சங்கீதம்
தக்காளிச்சட்னி
காதல் படுகுழியில்
விடியலுக்காக
மெழுகுவர்த்திகள்
இரக்கம் காட்டடி
பெண் அகராதியில் ஆண்
திறவுகோல்
அம்மா இறுதி முத்தங்கள் உனக்கு
இரங்கர்ப்பா
விண்ணில் ஒரு தாஜ்மஹால்
தாய்க்கு ஓர் தாலாட்டு
அப்பா
தாம்பத்தியம் வாழ்வில் விரிசல்
மண்குடம்
நினைவாஞ்சலி
தனி ஒருவன்
குற்றம் குற்றமே
வாய்ப்பு
போன்ற அரிய தலைப்புகளில் 110 க்கும் அதிகமான புதுக்கவிதைகள் ( மீ மொழி, இரங்கர்ப்பா, துளிப்பா ) இப்புத்தகத்தில் உள்ளது. காதலை, கடவுளை, பெற்றோரை, அரசியலை, இயற்கையை என தான் ரசித்த அனைத்தையும் கதாபாத்திரமாக கையில்லெடுத்துள்ளார்.
கவிதையில் ஒரு தாலாட்டு போல் இவர் தமிழ் கவிதைகள் அமைந்துள்ளது. தமிழை மழலை போல எளிமையாகவும், அழகாகவும், சிறப்பாகவும் காட்சிப்படுத்தியுள்ளார்.



            சுழற்சி
இருட்டறையில் மறைந்திருந்த
விதையொன்று முட்டி மோதி..
துளிர்த்து செடியாகி.. மரமாகி..
கிளை பரப்பியது..
மண்ணிலிருந்து..
விண்ணிற்கு பயணமாகும் நீராவி..
வெண் தோரணங்களாய்
புவி தொடுகிறது..
பறவைகளின் எச்சங்கள்
மண்ணில் புதைந்து ..
விதைகள் வேராகும் அதிசயமும்..
வாழ்க்கையின் சுழற்சியே..


Mugan Mugan அண்ணாவின் #ஒரு துளி கடலை பற்றிய விமர்சனம். பல வலி உடலினுள் ஒரு துளி கடல் நுழைந்து... இரணங்களை வரிசைப்படுத்தப் போகின்றதோ?! யார் இங்கு யாரை சுவாசிப்பது வாசிப்பினில் ! உயிரில்லா... திகிலடைந்து கிடைக்கும் பாழடைந்த இதய மண்டபத்தினுள் வலைவீசிடவோ கடலை.. நூல் என்ற படகேற்றி அனுப்புகிறாய் உள்ளத்தினுள்! நீ உண்டு கொட்டிய வேதனைகள்தான் முகக் கண்ணாடியாய் உன் கரத்தில்! அசைபோடு.....ஒவ்வொன்றாய் ... நீ பயணித்த பாதையில் நான் ஒரு துளியே என்று நூல் வடிக்கட்டும் கண்ணீர்..!! சிறப்பு சகோ சிறப்பு சாரதா...






புத்தகத்தை online ல் வாங்க Buy Now ஐ சொடுக்கவும். 
அல்லது
marina books ஐ 8883488866 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

No comments:

Post a Comment